Shuru
Apke Nagar Ki App…
பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் பள்ளம் பகுதியில் எம்எல்ஏ ஆய்வு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலை பகுதியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மேல்பள்ளம் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி தெரு விளக்கு வசதி சோலார் கம்பி வேலி உள்ளிட்ட பல்வேறு குறைகளை எம்எல்ஏ ரவிமனோகரனிடம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து எம்எல்ஏ விரைவில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்..
Suresh
பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் பள்ளம் பகுதியில் எம்எல்ஏ ஆய்வு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலை பகுதியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மேல்பள்ளம் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி தெரு விளக்கு வசதி சோலார் கம்பி வேலி உள்ளிட்ட பல்வேறு குறைகளை எம்எல்ஏ ரவிமனோகரனிடம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து எம்எல்ஏ விரைவில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்..
More news from Dindigul and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்1
- ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- சபரிமலை செல்பவர்களுக்கு வேண்டுகோள் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யாத்திரையை முடிந்தவரை ஒத்திவைக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் (TDB) கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16-21 (சிங்கம் மாத நடை திறப்பு) அல்லது ஆகஸ்ட் 24-28 (ஒணம் சிறப்பு பூஜைகள்) காலத்தில் தரிசனம் செய்ய திட்டமிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நீடித்து வருகிறது.1