Shuru
Apke Nagar Ki App…
பட்டுக்கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்
Saleem cctv technician
பட்டுக்கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்
More news from Thanjavur and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்1
- 10.03.2026 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- நாகப்பட்டினம் அடுத்துள்ள ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரதிபா. இவருடைய கணவர் கார்த்திக் தனக்கு நண்பர் உதவியுடன் ஈரான் நாட்டிற்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு போர் பதற்றம் நிலவுவதால், கடந்த ஒரு வாரகாலமாக தொடர்பு இழந்துள்ளதாகக் கூறி நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாக்ஷிடம் மனு அளித்தார். அங்கு சென்ற பிறகு அவருடன் எந்தவித தொலைபேசி தொடர்பும் கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவர் இருக்கும் இடம் குறித்த தகவலும் தெரியாத நிலையில் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் பிரதீபா தெரிவித்துள்ளார். எனவே தனது கணவரை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்1
- Post by ℬᴀʟᴀ ŧέcԩ1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1
- Post by Lingaraju mc6
- கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம பணியாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் பி கே சிவக்குமார் தலைமையிலும், தமிழ் மாநில வருவாய் துறை மாவட்ட செயலாளர் சுந்தரவளவன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டனம் முழக்கமிட்டனர்.1