திருப்பத்தூர் மாவட்டம் ஆத்துமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம். ஆத்துமேடு பகுதியில் தொழிலாளர் நலத்துறை வீடு கட்டுமான பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி, ஆத்துமேடு பகுதியில், (இன்று ஆகஸ்ட் 28)தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (2025-26), திரு.பெருமாள் என்ற பயனாளிக்கு ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீட்டின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், இன்று (28.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியின் தரம் மற்றும் பயனாளிக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து கேட்டறிந்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன், இளம்பருதி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்துமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம். ஆத்துமேடு பகுதியில் தொழிலாளர் நலத்துறை வீடு கட்டுமான பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி, ஆத்துமேடு பகுதியில், (இன்று ஆகஸ்ட் 28)தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (2025-26), திரு.பெருமாள் என்ற பயனாளிக்கு ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீட்டின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், இன்று (28.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியின் தரம் மற்றும் பயனாளிக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து கேட்டறிந்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன், இளம்பருதி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
- திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்பவர் தனது கணவரான ராமலிங்கம் இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள் ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கோவிலூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது. பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 28, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.1
- ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1