Shuru
Apke Nagar Ki App…
"பழைய டயர் டியூப் களை எரிக்காதே" புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை செய்யாறு கோட்டாச்சியர் அம்பிகா ஜெயின் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களிடையே புகையில்லா போகியினை கொண்டாடுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியை இரா தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பெருமாள் மற்றும் அறிவொளி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வட்ட சட்டப்பணிகள் குழு துணை தன்னார்வலர்கள் மலர் சாதிக், டாக்டர் இரா பாஸ்கரன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து டயர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என கருத்துரை வழங்கி பேசினார்கள். பேரணியில் 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றார்கள்.
A.Shahulhameed
"பழைய டயர் டியூப் களை எரிக்காதே" புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை செய்யாறு கோட்டாச்சியர் அம்பிகா ஜெயின் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களிடையே புகையில்லா போகியினை கொண்டாடுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியை இரா தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பெருமாள் மற்றும் அறிவொளி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வட்ட சட்டப்பணிகள் குழு துணை தன்னார்வலர்கள் மலர் சாதிக், டாக்டர் இரா பாஸ்கரன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து டயர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என கருத்துரை வழங்கி பேசினார்கள். பேரணியில் 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அதிமுக கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர். கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.1
- நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.1