தருமபுரி பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெற்றி கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இணைந்துள்ளது. இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் , பட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பாமக கூட்டணி உறுதியானது, அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அன்புமணி ஆகியோர் கூட்டணியை அறிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாமக தொண்டர்கள் தமிழகம் முழுவதும், பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில் தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.செந்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக - தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நாளை நாங்கள் மட்டுமல்ல தமிழகமே கொண்டாடுகிறது, இது அறிவிப்பு வந்த நாள் இல்லை தேர்தல் முடிவு வந்த நாள், இன்றிலிருந்து வெற்றி பயணம் தான், எப்படி 2001ல் 2006ல் தமிழகத்தின் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி மாற்றியதோ அதே போல இந்த மாற்றமும் உறுதியாக நடைபெறும், 5 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திய, மக்கள்விரோத ஆட்சி நடத்திய, தமிழகத்தின் எல்லா முன்னேற்றத்திற்க்கும் முட்டுகட்டை போட்ட, பொய் புள்ளி விபரங்களால் ஒரு புனைவை கட்டிய திமுகவை வீட்டிற்க்கு அனுப்ப கூடிய ஒரு தேர்தல், இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல், இதுதான் உண்மையான விடியல் என்று காட்ட போகிற தேர்தல் இதனை நாங்கள் கொண்டாடுகிறோம், தமிழகமே கொண்டாடுகிறது, தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்திற்க்கு செல்வார்கள், எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் வெங்கடேஷ்ராஜி, நகர தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் கவுரப்பன், சங்கர, செந்தில், நகர அமைப்பு தலைவர் முருகன், மற்றும் வணங்காமுடி, கதிரவன், சரவணன், ஜெய்கணேஷ்,அஜித்குமார், செல்வம், தகடுர்தமிழன், முரளி, பூக்கடை ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெற்றி கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இணைந்துள்ளது. இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் , பட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பாமக கூட்டணி உறுதியானது, அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அன்புமணி ஆகியோர் கூட்டணியை அறிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாமக தொண்டர்கள் தமிழகம் முழுவதும், பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில் தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.செந்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக - தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நாளை நாங்கள் மட்டுமல்ல தமிழகமே கொண்டாடுகிறது, இது அறிவிப்பு வந்த நாள் இல்லை தேர்தல் முடிவு வந்த நாள், இன்றிலிருந்து வெற்றி பயணம் தான், எப்படி 2001ல் 2006ல் தமிழகத்தின் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி மாற்றியதோ அதே போல இந்த மாற்றமும் உறுதியாக நடைபெறும், 5 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திய, மக்கள்விரோத ஆட்சி நடத்திய, தமிழகத்தின் எல்லா முன்னேற்றத்திற்க்கும் முட்டுகட்டை போட்ட, பொய் புள்ளி விபரங்களால் ஒரு புனைவை கட்டிய திமுகவை வீட்டிற்க்கு அனுப்ப கூடிய ஒரு தேர்தல், இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல், இதுதான் உண்மையான விடியல் என்று காட்ட போகிற தேர்தல் இதனை நாங்கள் கொண்டாடுகிறோம், தமிழகமே கொண்டாடுகிறது, தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்திற்க்கு செல்வார்கள், எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் வெங்கடேஷ்ராஜி, நகர தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் கவுரப்பன், சங்கர, செந்தில், நகர அமைப்பு தலைவர் முருகன், மற்றும் வணங்காமுடி, கதிரவன், சரவணன், ஜெய்கணேஷ்,அஜித்குமார், செல்வம், தகடுர்தமிழன், முரளி, பூக்கடை ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- கிருஷ்ணகிரி அவதானபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென பிரேக் பிடக்காததால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த ஆறு கார்களும் ஈச்சர் லாரி மீது ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கனரக வாகனம் உட்பட ஆறு கார்கள் பலத்தை சேதம் அடைந்தன இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயத்துடன் 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஈச்சர் லாரி வாகன ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து படித்துறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் படித்துறை பராமரிப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1