Shuru
Apke Nagar Ki App…
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு அமைச்சர் ஐ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளன. அவர் தனது முதுகை பார்க்காமல் பேசுகிறார். உச்சநீதிமன்றத்திலேயே அவர் விடுதலையான வழக்கை சந்திக்கவேண்டும் என சொல்லியுள்ளனர். திமுகவினர் கொடுக்கும் அண்டா, ஹாட்பாக்ஸ்ன் தரத்தை பார்க்கவேண்டும். சுடுதண்ணீர் எவ்வளவு நேரம் இருக்கும் என தெரியாது. அவை டூப்ளிகேட் சரக்குகள். – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி.
Natarajan Pitchaimani
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு அமைச்சர் ஐ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளன. அவர் தனது முதுகை பார்க்காமல் பேசுகிறார். உச்சநீதிமன்றத்திலேயே அவர் விடுதலையான வழக்கை சந்திக்கவேண்டும் என சொல்லியுள்ளனர். திமுகவினர் கொடுக்கும் அண்டா, ஹாட்பாக்ஸ்ன் தரத்தை பார்க்கவேண்டும். சுடுதண்ணீர் எவ்வளவு நேரம் இருக்கும் என தெரியாது. அவை டூப்ளிகேட் சரக்குகள். – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்பா செட்டியார் ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மீக வழிபாட்டில் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வரிசையாக அமர்ந்து பெண்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்தனர்.சுமங்கலிப் பூஜையாகவும், ஊர் நலம் காக்கும் வழிபாடாகவும் கருதப்படும் இந்த பூஜையில், கோவில் வளாகம் முழுவதும் விளக்குகளின் ஒளியால் களைகட்டியதுடன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.1
- Post by அன்பரசு1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...1
- Post by மா.கணேஷ்1
- Post by Sri ram1
- Post by Corp M4
- திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன? இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா? விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார். சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும், கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது. பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர், முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.1
- 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது... 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...1