Shuru
Apke Nagar Ki App…
ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
செல்வம்
ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
More news from Tamil Nadu and nearby areas
- ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- Post by Moorthi Moorthi2
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- புத்தாண்டை முன்னிட்டு, இனாறு காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சோமாஸ்கந்தருக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.1
- மேட்டுப்பாளையம். சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் இடையே நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காந்தையாற்றில் வெள்ளபெருக்கு.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்ராயசாமி பெருமாள் கோயிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்த கோடிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.1