logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

9 hrs ago
user_ThigazhYaazhan
ThigazhYaazhan
Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
9 hrs ago

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    1
    திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பேயர் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கியது. கருத்தரங்கில் மக்காச்சோள பயிர்களுக்கான 'டிகால்ப்' (DEKALB) மற்றும் காய்கறிகளுக்கான 'செமினிஸ்' (Seminis) போன்ற உயர் விளைச்சல் தரும் விதைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக எடை மற்றும் மணிகள் கொண்ட கதிர்களைத் தரும் ரகங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பயிர்களைப் பாதுகாக்கும் களைக்கொல்லிகள் (உதாரணமாக கவுன்சில் ஆக்டிவ் லாடிக்ஸ்), பூச்சிக்கொல்லிகள், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என 140-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விவசாயிகளுக்குத் தங்களின் சேவையின் கீழ் நிறுவனம் வழங்குகிறது. பேயர் கிராப் சயின்ஸ் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல மில்லியன் சிறு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விளைச்சலை மேம்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் ஊக்கிகளைப் பயன்படுத்திப் பலன் பெறவும் கருத்தரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேயர் நிறுவன மேலாளர்கள் பாண்டியராஜன், ரெஞ்சிதாமஸ், ரேவந்த் குமார் சாஹர், சுதாகர் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் வருகை தந்த அனைத்து விவசாயிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பேயர் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கியது.

கருத்தரங்கில் மக்காச்சோள பயிர்களுக்கான 'டிகால்ப்' (DEKALB) மற்றும் காய்கறிகளுக்கான 'செமினிஸ்' (Seminis) போன்ற உயர் விளைச்சல் தரும் விதைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக எடை மற்றும் மணிகள் கொண்ட கதிர்களைத் தரும் ரகங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பயிர்களைப் பாதுகாக்கும் களைக்கொல்லிகள் (உதாரணமாக கவுன்சில் ஆக்டிவ் லாடிக்ஸ்), பூச்சிக்கொல்லிகள், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என 140-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விவசாயிகளுக்குத் தங்களின் சேவையின் கீழ் நிறுவனம் வழங்குகிறது.

பேயர் கிராப் சயின்ஸ் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல மில்லியன் சிறு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விளைச்சலை மேம்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் ஊக்கிகளைப் பயன்படுத்திப் பலன் பெறவும் கருத்தரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேயர் நிறுவன மேலாளர்கள் பாண்டியராஜன், ரெஞ்சிதாமஸ், ரேவந்த் குமார் சாஹர், சுதாகர் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் வருகை தந்த அனைத்து விவசாயிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    7 hrs ago
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    1
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    2
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    1
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கும்போது விபத்துகளைத் தடுப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி அமர்வுகளின் போது மாணவர்களுக்கு இது குறித்துக் கல்வி கற்பிக்குமாறும், அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வீடுகளிலும் இந்த பாதுகாப்பு நடைமுறையைக் கடைப்பிடிப்பதை பெற்றோர்கள் வலியுறுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும்போது எப்பொழுதும் மிகவும் கவனமாக இறங்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உடனடியாகச் செல்லாமல், சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு, அதன் பிறகே பேருந்தின் பின்புறமாகச் செல்ல வேண்டும். விபத்துகளைத் தவிப்பதற்காக எப்போதும் பின்பற்ற வேண்டிய இந்த முக்கியமான பேருந்து பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைவரும் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கும்போது விபத்துகளைத் தடுப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி அமர்வுகளின் போது மாணவர்களுக்கு இது குறித்துக் கல்வி கற்பிக்குமாறும், அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வீடுகளிலும் இந்த பாதுகாப்பு நடைமுறையைக் கடைப்பிடிப்பதை பெற்றோர்கள் வலியுறுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும்போது எப்பொழுதும் மிகவும் கவனமாக இறங்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உடனடியாகச் செல்லாமல், சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு, அதன் பிறகே பேருந்தின் பின்புறமாகச் செல்ல வேண்டும். விபத்துகளைத் தவிப்பதற்காக எப்போதும் பின்பற்ற வேண்டிய இந்த முக்கியமான பேருந்து பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைவரும் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    30 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.