Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்கள் கைது. தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மேரி ஜெனிதா வழக்கு பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் காசிபாண்டி (22), திருநெல்வேலி, தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜகோபால் (24) மற்றும் திருநெல்வேலி, மானூர் பகுதியைச் சேர்ந்த மணி மகன் ரமேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 14 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
News
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்கள் கைது. தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மேரி ஜெனிதா வழக்கு பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் காசிபாண்டி (22), திருநெல்வேலி, தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜகோபால் (24) மற்றும் திருநெல்வேலி, மானூர் பகுதியைச் சேர்ந்த மணி மகன் ரமேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 14 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 91 சிலைகளும் அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் தலா 7 சிலைகளும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து பக்தி இன்னிசை முழங்க பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிலைகள் வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் முருகன் கோவில் கடலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடக்கிற அருகிலே சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தூத்துக்குடி பி என் டி காலனி சேர்ந்த வாழ்த்துக்கள்.இசக்கி ராஜ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் அஞ்சு பவுன் நகை வேலவன் ஸ்டோர் நான் கடையில் வாங்கினேன் தாலி செயின் தான் அது மூன்று வருடமாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளேன் அவர்கள் அதை ஆடிட்டிங் பார்த்தபோது தங்கம் இல்லாத உலோகம் இருப்பதாக கூறினார்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி உள்ளார்கள் வேலவன் கடைக்கு நான் அந்த வீடியோவை அனுப்பினேன் இதனை எடுத்து வேலவன் நகைக்கடை பணியாளர்கள் நேரடியாக வந்து தனியார் நிதி நிறுவனத்தில் வந்து பார்வையிட்டார்கள். வேலவன் நகைக்கடைகாரர்களே நாலு லட்சத்து 22,000 தனியார் நிதி நிறுவனத்திலிருந்து நகையைத் திருப்பிப் படுகிறது அரசு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வேலவன் கடையில் வைத்து நகையை சோதனை செய்யும் போது சரியான முறையில் இருப்பதாக கூறுகிறார்கள் எங்களுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது அடுத்து தாலி செயின் நடுப்பகுதியை வெட்டப்பட்டு அதனை உருக்கி மீண்டும் சோதனை செய்யும் போது தங்கம் இல்லாத உலோகம் கலக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது நாங்கள் கேட்கும்போது இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உறவினர்கள் நண்பர்கள் வேலவன் நகை கடையில் நகை வாங்கி உள்ளார்கள் தாலி செயினில் தான் இந்த தங்கம் இல்லாத உலோகம் சேர்க்கப்பட்டதாக தெரிய வருகிறது குறுகிய காலத்தில் அதிக லாபம் செய்வதற்காகவே வேலவன் நகைக்கடை நிறுவனம் இப்படி செய்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நகை கடை மீது அச்சம் ஏற்படுகிறது தங்கம் மீது இது போல மோசடி நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எங்களுக்கு மட்டும் நகையை திருப்பி தர வேண்டாம் இதுவரை உங்களிடம் தங்கம் வாங்கிய அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் தேசிய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலவன் ஸ்டோர் நகை கடையில் யாரும் தங்கம் வாங்கி ஏமாற வேண்டாம் தங்கம் நகை விற்பதை தடை செய்ய வேண்டும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் வேலவன் நகைக்கடை நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகையை திருப்பி வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம்கூறினார். உடன் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் வள்ளிக்கண்ணு தேவர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேலவன் னஹப்பர் மார்க்கெட் நிறுவனம் நகைக்கடை மீது கூறப்பட்ட புகார் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2
- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அருவி நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தவெக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புறம் கீழ புதுகுடியை சேர்ந்த பீட்டர்(48). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்செந்தூர் மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஞானராஜ் என்பவருக்கும், பீட்டருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பீட்டர் கடந்த 10-ம் தேதி காலையில் தனது மகனை அம்மன்புரத்தில் பஸ் ஏற சென்று விட்டு விட்டு வீடு திரும்பியபோது அங்குள்ள சர்ச் நுழைவாயில் அருகே சென்றதில் ஞானராஜ் தம்பி மகன் ஆல்வின் மற்றும் அவருடன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நான்கு பேர் உட்பட மொத்தமா ஐந்து பேர் பீட்டர் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதில் காயமடைந்த பீட்டர் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஐந்து பேரை தேடி வருகின்றனர்.2
- தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல் கண்ணில் பலத்த காயம்; மருத்துவமனையில் சிகிச்சை1
- சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.1