Shuru
Apke Nagar Ki App…
மதுரை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி. சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.
சு.இரத்தினவேல்
மதுரை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி. சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தபால் வாக்குப்பதிவின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் குளறுபடி நடந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தோழர் ஜீவானந்தம் தெரு பகுதியில் வசிக்கும் 90 வயது முதியவர் ராஜாமணி.மனைவி சீதை அம்மாள் இருவரிடம் தபால் வாக்கு பெறச் சென்ற தேர்தல் அதிகாரிகள், உறவினர்களை வெளியேற்றிவிட்டு, அவர் விருப்பத்திற்கு மாறாக மாற்றுச் சின்னத்தில் வாக்களித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராஜாமணியின் குடும்பத்தினர் காவல் துறை மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் , இது தொடர்பாக சார் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முயன்றபோது, அவர் நேரில் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வேட்பாளர் பிரபு தலைமையில் தொண்டர்கள் காரைக்குடி - தேவகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின் போக்குவரத்து சீரானது.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் இன்று வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடம் தபால் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் பொது வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிக்கு வர முடியாத முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ள நபர்களிடம் அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்ப்பட்ட நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இன்று தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் வீடுகளில் சென்று வாக்குகள் பதிவு பெறப்பட்டு சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் செலுத்தப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ.சக்திவேல் அவர்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேரூராட்சி 13 -வது வார்டு பொதுமக்களை சந்தித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்வில் 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக வார்டு செயலாளர் தேவகி தென்னரசு மற்றும் முருகன் நாகராஜ் மற்றும் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.1
- சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று திருமயம் அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.1