காரிமங்கலம் அருகே 3 கிலோ மீட்டர் சாலையில் 300 ஓட்டைகள் - அரை குறை பேட்ச் ஒர்க் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முருக்கன் காட்டு கொட்டாய் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனுமந்தபுரம் நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கிராம தார்சாலை உள்ளது, கடந்த 4 ஆண்டுகளாக இச்சாலை பழுதாகி 3 கிலோ மீட்டர் சாலையில் 300க்கும் மேற்பட்ட இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமாக மாறி உள்ளது, இதனால் பள்ளி வாகனங்கள் ஊருக்குள் வருவதில்லை என்றும், இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி அடிக்கடி கிழே விழுவதால் விபத்துக்களும், காயங்களும் ஏற்படுவதுடன், வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இப்பகுதிக்கு புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிய தார்சலை அமைப்பதற்க்கு பதில் ஆங்காங்கே பேட்ச் ஒர்க் செய்வதாக வந்த பாலக்கோடு நெடுஞ்சாலை துறையினர், கிராமத்தின் தொடக்க பகுதியிலும், முடிவு பகுதியிலும் மட்டுமே பேட்ச் ஒர்க் செய்து விட்டு சென்றுள்ளனர். மற்ற இடங்களில் சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். 3 கிலோ மீட்டர் சாலைக்கு பேட்ச் ஒர்க் செய்ய லட்சகணக்கில் பணத்தை ஒதுக்கீடு செய்தும் முழுமையாக சாலையை சீரமைக்காமல் அரைகுறை வேலை செய்து வரும் இவர்களின் பணிகள் மாவட்ட ஆட்சியர் கவணத்திற்க்கு செல்கிறதா இல்லையா எனவும், இவர்களின் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் அருகே 3 கிலோ மீட்டர் சாலையில் 300 ஓட்டைகள் - அரை குறை பேட்ச் ஒர்க் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முருக்கன் காட்டு கொட்டாய் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனுமந்தபுரம் நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கிராம தார்சாலை உள்ளது, கடந்த 4 ஆண்டுகளாக இச்சாலை பழுதாகி 3 கிலோ மீட்டர் சாலையில் 300க்கும் மேற்பட்ட இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமாக மாறி உள்ளது, இதனால் பள்ளி வாகனங்கள் ஊருக்குள் வருவதில்லை என்றும், இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி அடிக்கடி கிழே விழுவதால் விபத்துக்களும், காயங்களும் ஏற்படுவதுடன், வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இப்பகுதிக்கு புதிய தார்சாலை அமைத்து
தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிய தார்சலை அமைப்பதற்க்கு பதில் ஆங்காங்கே பேட்ச் ஒர்க் செய்வதாக வந்த பாலக்கோடு நெடுஞ்சாலை துறையினர், கிராமத்தின் தொடக்க பகுதியிலும், முடிவு பகுதியிலும் மட்டுமே பேட்ச் ஒர்க் செய்து விட்டு சென்றுள்ளனர். மற்ற இடங்களில் சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். 3 கிலோ மீட்டர் சாலைக்கு பேட்ச் ஒர்க் செய்ய லட்சகணக்கில் பணத்தை ஒதுக்கீடு செய்தும் முழுமையாக சாலையை சீரமைக்காமல் அரைகுறை வேலை செய்து வரும் இவர்களின் பணிகள் மாவட்ட ஆட்சியர் கவணத்திற்க்கு செல்கிறதா இல்லையா எனவும், இவர்களின் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சங்ககிரி அருகே ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியல் பணம் கையாடல்:அறநிலையத்துறை அதிகாரி மீது சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்... சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோவில் உள்ளது... இக்கோவிலுக்கு சொந்தமான உண்டியல் கடந்த 17ம்தேதி அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, சேலம் சுகனேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் அம்சா மற்றும் எடப்பாடி இந்து அறநிலைத்துறை சரக ஆய்வாளர் கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் திறந்து அன்னதான மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தில் கணக்கிடப்பட்டது... அப்போது உண்டியல் காணிக்கையாக ரூ 12 லட்சத்து 38 ஆயிரத்து 44 இருந்தது.அந்த பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு ரசீது பெறப்பட்டது.இந்நிலையில் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணத்தை திருடியதாக திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் அல்லிக்குட்டை இராதாகிருஷ்ணன் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளார்... இது குறித்து நாமக்கல் நரசிம்ம பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் புகார் வந்ததையொட்டி, நேற்று (1ந்தேதி) உண்டியல் திறப்பு நடைபெற்ற அன்னதான மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உண்டியல் திறப்பு நிகழ்வுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வந்த அம்சா, உண்டியல் பணத்தை கையாடல் செய்தது கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது... இது குறித்து சங்ககிரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்... சங்ககிரி அருகே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில் பணத்தை பாதுகாக்கும் அதிகாரியே பணத்தை களவாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.1
- தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் சேத்தியாதோப்பு பகுதி சேர்ந்தவர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் புவனகிரி தொகுதி மகாலிங்கம் என்பவர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதன் பிறகு வாக்காளர்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- பக்கா பாலிடிக்ஸ் பகுதிக்கு.... காங்கிரஸ் கொடி ஒன்று கூட இல்லை.. வீணா போனவன் வைஸ் சேர்மனாய் இருந்தும், கொடி கட்டவில்லை எடப்பாடியில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி M.P.S.மணி குமுறல்.... சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடந்தது... இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் M.P.S.மணி, பேசுகையில்,சேலம் மாவட்டம் எடப்பாடியின் நகராட்சி சேர்மன் ஆக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்... வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடிக்க செய்தவர் எம்பி செல்வகணபதி, அவர் தனது தேர்தல் வித்தையை எடப்பாடி,சங்ககிரி,மேட்டூர் தொகுதிகளில் இப்போது காட்ட வேண்டும்... காங்கிரஸில் பல தியாகங்கள் செய்துள்ளோம். நான் செல்வகணபதிக்கு செல்ல பிள்ளை. கடந்த காலங்களில் காங்கிரஸ் கொடி கட்டவில்லை என சண்டை போட்டுள்ளேன். நான் மாவட்ட தலைவராக இருக்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு திருப்பூரில் இருந்து கொடி வாங்கி வந்து கட்டினேன். ஆனால் இன்று ஒரு கொடி கூட கட்டவில்லை. வீணாய் போன காங்கிரசைச் சேர்ந்த எடப்பாடி நகராட்சி துணை சேர்மனாய் இருந்தும் கொடி கட்டப்படவில்லை. கொடி கட்ட வேண்டுகோளாக விடுகிறேன். ஒரு உற்சாகப்படுத்தும் வகையில் கொடியை கட்டி இருக்கலாம். அங்கு 5 கொடி கொடுத்தால் எங்களுக்கு ஒரு கொடி கொடுங்கள். அப்பதான் கட்சியையும் கூட்டணியும் ஒருங்கிணைக்க முடியும். இந்த தொகுதியை நாங்கள் ஜெயித்துக் கொடுக்கிறோம். ஒரு காலத்தில் எடப்பாடி காங்கிரசின் முனிசிபாலிட்டியாக இருந்தது. எனவே மீண்டும் அந்த பதவியை எங்களுக்கு தர வேண்டும். நான் 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து விட்டேன். இன்னும் ஒரு பஞ்சாயத்துக்கு கூட மெம்பராக இல்லை. மேடையிலேயே காங்கிரஸ் உதவி சேர்மனை காங்கிரஸ் நிர்வாகி வறுத்தெடுத்த இந்த நிகழ்வு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது...1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1