logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

10 வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 444 ஆண் பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் 159 பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 250 வீதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து. இன்று மாரண்டஅள்ளியில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில் கோபால்,செல்வராஜ்,செந்தில்குமார், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன்,பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

22 hrs ago
user_G Krishnan
G Krishnan
Journalist Dharmapuri, Tamil Nadu•
22 hrs ago

10 வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 444 ஆண் பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் 159 பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 250 வீதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து. இன்று மாரண்டஅள்ளியில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில் கோபால்,செல்வராஜ்,செந்தில்குமார், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன்,பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 7 மாதங்களில் பேரூராட்சி கோடிக்கணக்கில் ஊழல் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்முருகன் 4 ஆண்டுகளாக மேலாக செயல்பட்டு வருகிறார். சில மாதங்களாக பேரூராட்சி தலைவரும் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் புதிய குடிநீர் இணைப்புகள். கொசு மருந்து வாங்குவதில். மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் குழாய் மோட்டர்கள் வாங்குவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்யவில்லை என செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் போஸ்டர்கள் கிழித்து வருகின்றனர்.
    1
    ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 7 மாதங்களில் பேரூராட்சி கோடிக்கணக்கில் ஊழல் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது. 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக பேரூராட்சி  மன்ற தலைவர் ஜெய்முருகன் 4 ஆண்டுகளாக மேலாக செயல்பட்டு வருகிறார். சில மாதங்களாக பேரூராட்சி தலைவரும் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் புதிய குடிநீர் இணைப்புகள். கொசு மருந்து வாங்குவதில். மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் குழாய் மோட்டர்கள் வாங்குவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்யவில்லை என செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் போஸ்டர்கள் கிழித்து வருகின்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    13 min ago
  • முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    36 min ago
  • தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து  30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து  30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    10 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    9 hrs ago
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
    1
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    14 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை,
மோளப்பாறை,பனங்காடு,
கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க  கூலி, போக்குவரத்து அடக்கம்.  
விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும்,  இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர்.
பேட்டி : 
1. பழனிச்சாமி...
கரும்பு விவசாயி...
2. கோபால்...
கரும்பு விவசாயி...
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    7
    ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist Attur, Salem•
    54 min ago
  • சிவகாசியில் பூட்டை உடைத்து கொள்ளை – அமர்ந்து சவகாசமாக திருடிய இளைஞர், சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 3,000 ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், செங்கமலநாச்சியாபுரத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 21) என்பவர் இந்த திருட்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை விரைவாக கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளில், குற்றவாளி எந்தவித அவசரமும் இல்லாமல் கடைக்குள் புகுந்து, அமர்ந்து சவகாசமாக பணம் மற்றும் செல்போனை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குருசாமியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது முன்பு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐயப்பன் கோவில் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சிசிடிவி கண்காணிப்பு குற்றவாளிகளை கண்டறிய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
    1
    சிவகாசியில் பூட்டை உடைத்து கொள்ளை – அமர்ந்து சவகாசமாக திருடிய இளைஞர், சிசிடிவி காட்சி வெளியாகி  வைரலாகி வருகிறது 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் திருட்டு சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 3,000 ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், செங்கமலநாச்சியாபுரத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 21) என்பவர் இந்த திருட்டை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை விரைவாக கைது செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில், குற்றவாளி எந்தவித அவசரமும் இல்லாமல் கடைக்குள் புகுந்து, அமர்ந்து சவகாசமாக பணம் மற்றும் செல்போனை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குருசாமியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது முன்பு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐயப்பன் கோவில் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சிசிடிவி கண்காணிப்பு குற்றவாளிகளை கண்டறிய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    18 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.