logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

1 hr ago
user_நா. முருகன்
நா. முருகன்
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
1 hr ago

முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
    1
    முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம்.
முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம்,
திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில்
வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார்புத்தூர் சமூக மக்கள் கொண்டாடும் மதுக்கரை செல்லாயி விநாயகர் சதுர்த்தி விழா திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார் புத்தூரில் சமூக மக்கள் கொண்டாடும்... மதுக்கரை செல்லாயி - விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சீப்ளாபுத்தூர் கிராமத்தில் தூக்கு தேர் திருவிழா நடந்த போது... மதுக்கரை செல்லாயி தேர் - வன்னியர் தெரு வந்தது... பூஜை நிறைவு செய்த போது... பக்தர்களால் தேரை தூக்க முடியாமல் போனதால்... தேரை கலைத்து விட்டு.தனித்தனியாக. தூக்கி சென்றுள்ளனர்... அன்றிலிருந்து மதுக்கரை செல்லாயி வன்னியர் தெருவில் குடிகொண்டிருப்பதாக... மக்கள் நம்புகிறார்கள்... மேலும் தேர் நிற்கும் இடத்தில் தரையில் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்...திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடினர் நிகழ்வில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார்புத்தூர் சமூக மக்கள் கொண்டாடும் மதுக்கரை செல்லாயி விநாயகர் சதுர்த்தி விழா
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார் புத்தூரில் சமூக மக்கள் 
கொண்டாடும்... மதுக்கரை செல்லாயி -
விநாயகர் சதுர்த்தி விழா 
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சீப்ளாபுத்தூர் கிராமத்தில் 
தூக்கு தேர் திருவிழா நடந்த போது...
மதுக்கரை செல்லாயி தேர் - வன்னியர் தெரு வந்தது... பூஜை நிறைவு செய்த போது... பக்தர்களால் தேரை தூக்க முடியாமல் போனதால்...
தேரை கலைத்து விட்டு.தனித்தனியாக. தூக்கி சென்றுள்ளனர்...
அன்றிலிருந்து மதுக்கரை செல்லாயி 
வன்னியர் தெருவில் குடிகொண்டிருப்பதாக... மக்கள் நம்புகிறார்கள்... மேலும் தேர் நிற்கும் இடத்தில் தரையில் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்...திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடினர் நிகழ்வில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மணப்பாறையில் இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்! ​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. ​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    1
    மணப்பாறையில் 
 இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்!
​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    1
    குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும்  பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    50 min ago
  • கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம்,  அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    20 hrs ago
  • முசிறி அருகே காட்டுப்புத்தூரில் சைக்கிளில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி காட்டுப்புத்தூர் போலீஸ் விசாரணை கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் –சைக்கிள் மோதல் இருவர் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் மற்றும் சைக்கிளும் நேருக்கு நேர் நேற்று இரவு மோதி கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர். காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). விவசாய வேலை செய்து வந்தவர் நேற்று இரவு வளையப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, காட்டுப்புத்தூர் நோக்கி வந்துள்ளார், இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (52) கூலி வேலை செய்து வரும் இவர் காட்டுப்புத்தூர் சென்று விட்டு தனது சைக்கிளில் குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது .விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர் , அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்க்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    1
    முசிறி அருகே காட்டுப்புத்தூரில் சைக்கிளில் பைக் மோதியதில்  சம்பவ இடத்திலேயே இருவர் பலி காட்டுப்புத்தூர் போலீஸ் விசாரணை
கே குமார் செய்தியாளர் முசிறி
முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் –சைக்கிள் மோதல் இருவர் உயிரிழப்பு 
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் மற்றும் சைக்கிளும் நேருக்கு நேர் நேற்று இரவு மோதி கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர்.
காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). விவசாய வேலை செய்து வந்தவர் நேற்று இரவு வளையப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு,  காட்டுப்புத்தூர் நோக்கி வந்துள்ளார்,
இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (52) கூலி வேலை செய்து வரும் இவர் காட்டுப்புத்தூர் சென்று விட்டு தனது சைக்கிளில் குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது
.விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர்
, அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்க்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    1
    துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு 
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). 
இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல்  பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக  இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு  வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.