தமிழக வெற்றி கழகத்திற்கு புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் பாராட்டு. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துத் தனது ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்யின் அதிரடித் தொடக்கம் மிகவும் பலமானது எனப் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டியுள்ளார். அதே சமயம், இத்தகைய திட்டங்களின் வெற்றி என்பது காவல்துறையின் திறமையான செயல்பாட்டிலேயே அடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்; குறிப்பாக, காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் தரம், பணியிட மாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை மற்றும் காவல்துறைக்கு வழங்கப்படும் அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அரசின் உண்மையான நோக்கம் வெளிப்படும் என அவர் தெரிவித்துள்ளார். "செயல்படுத்தப்படும் விதம் நம்பகமானதாக இருந்தால் மட்டுமே நிர்வாகம் வெற்றி பெறும்" என்று குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, புதிய அரசு தனது அறிவிப்புகளைக் களத்தில் எவ்வளவு தூரம் நேர்மையுடன் அமல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும் என்பதையும் தனது கருத்தின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் பாராட்டு. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துத் தனது ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்யின் அதிரடித் தொடக்கம் மிகவும் பலமானது எனப் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டியுள்ளார். அதே சமயம், இத்தகைய திட்டங்களின் வெற்றி என்பது காவல்துறையின் திறமையான செயல்பாட்டிலேயே அடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்; குறிப்பாக, காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் தரம், பணியிட மாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை மற்றும் காவல்துறைக்கு வழங்கப்படும் அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அரசின் உண்மையான நோக்கம் வெளிப்படும் என அவர் தெரிவித்துள்ளார். "செயல்படுத்தப்படும் விதம் நம்பகமானதாக இருந்தால் மட்டுமே நிர்வாகம் வெற்றி பெறும்" என்று குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, புதிய அரசு தனது அறிவிப்புகளைக் களத்தில் எவ்வளவு தூரம் நேர்மையுடன் அமல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும் என்பதையும் தனது கருத்தின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- தமிழக முதலமைச்சர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் தனது குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அன்புமணியின் குடும்பத்தினர் முதலமைச்சரை நெகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்தனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.1