Shuru
Apke Nagar Ki App…
mettuvayal my new site roof electrical pipe installation work done
Muruga...Technician
mettuvayal my new site roof electrical pipe installation work done
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Muruga...Technician2
- வேளாங்கண்ணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை அலுவலத்தினை மாவட்ட செயலாளர் கெளதமன் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.லதா அவர்களை ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும் வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி , சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, திமுக கீழ்வேளூர் சட்டமன்ற பார்வையாளர் இரா.சங்கர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அஜிஸ், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் ,மதிமுக மாவட்ட துணை செயலாளர் சித்ரா, ஆனந்த்,மஜக நிர்வாகிகள் ஜெக்கரியா, சாகுல் அகமது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கஜாலி,ஹாஜா,தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமத்துவ மக்கள் கழகம் தாஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா, மாவட்ட பிரதிநிதிகள் மு.ப.ஞானசேகரன், இராம.இளம்பரிதி, நரசிம்மன், நிர்வாகிகள் அருள் செந்தில், ரவிச்சந்திரன்,அனுசியா ஜோதிபாசு,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் டேனியல் சத்யா, ரெக்ஸ், ரபீக்,சௌரி ராஜன்,கணேசன்,ஆனந்த கைலாசம், தேவராஜ், சுப்பிரமணியன்,அன்புமணி,ஜோதிபாசு,விஜய குமாரி,ஒன்றிய சார்பு அணி இளைஞரணி புகழேந்திரன், கந்தையன், ரகமத்துல்லா,ராஜ செல்வம்,ஆனந்த்,தமிழ் செல்வம், ஒய்.எஸ்.மணியன், குமார செல்வம், தளபதி முருகானந்தம், மகளீரணி நித்யா மற்றும் கிளை கழக செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவும் சில இடங்களில் லேசான மழை தூறலும் இருந்த நிலையில் இன்று 8-ந் தேதி புதன்கிழமை காலை கீழ்வேளுரை அடுத்த தேவூரில் பெய்த கோடை மழை தற்போது கீழ்வேளூர், பட்டமங்கலம், அகரகடம்பனூர் உள்ளிட்ட கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து கட்டி வருகிறது.1
- கீழ்வேளூர் சட்டமன்ற் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமதி.டி.லதா ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் வேளை பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் மாவட்ட செயலாளரும்,மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் திறந்து வைத்தார் நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி CPIM.மாவட்ட செயலாளர் மாரிமுத்து ,கீழ்வேளூர் சட்டமன்ற பார்வையாளர்.இரா.சங்கர் ,விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் அருட் செல்வன்,திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன்,சிபிஐ மாநில குழு உறுப்பினர் செல்வம்,சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் அஜிஸ் டிடிஎம்கே கட்சி நிர்வாகிகள் பூமி நாதன்,முருகன்,MDMK எம்டிஎம்கே மாவட்ட துணை செயலாளர் சித்ரா,ஆனந்த்,மஜக நிர்வாகிகள் ஜெக்கரியா,சாகுல் அகமது, எம்.எம்.கேகட்சி நிர்வாகிகள் ஹாஜா எஸ்.டி பி ஐகட்சி நிர்வாகிகள் கஜாலி,ஹாஜா,தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன்,சமத்துவ மக்கள் கழகம் தாஸ்,வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மு.ப.ஞானசேகரன்,இளம்பரிதி,நரசிம்மன்,அருள் செந்தில்,ரவிச்சந்திரன்,அனுசியா ஜோதிபாசு,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் ரபீக்,சௌரி ராஜன்,கணேசன்,ஆனந்த கைலாசம்,தேவராஜ்,சுப்பிரமணியன்,அன்புமணி,ஜோதிபாசு,விஜய குமாரி,ஒன்றிய சார்புஅணி இளைஞரணி புகழேந்திரன்,கந்தையன்,ரகமத்துல்லா,ராஜ செல்வம்,ஆனந்த்,தமிழ் செல்வம்,ஒய்.எஸ்.மணியன்,குமார செல்வம்,தளபதி முருகானந்தம்,மகளீரணி நித்யா மற்றும் கிளை கழக செயலாளர்கள்,பிரதிநிதிகள்,கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்4
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சமீபத்தில் திருச்சியிலிருந்து கம்பம் நோக்கி சென்றபோது, அதன் வழித்தட காட்டி எல்.இ.டி திரையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிர விடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசு பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் எல்.இ.டி திரையை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, அதில் இருந்த தகவல்களை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பேருந்தில் உள்ள வைஃபை இணைப்பின் கடவு சொல்லை கண்டறிந்து, அதன் மூலம் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் மீண்டும் பதிவேற்றப்பட்டன. இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாத வண்ணம் டிஜிட்டல் பலகைகளின் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- *இலங்கங்குறிச்சியில் மாரியம்மன் கோயில் அருகே கிணற்றிற்கு தடுப்பு வேலி அமைத்து தருவதாக மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.* *ஒரேநாளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.* திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடங்கி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இளங்காங்குறிச்சி பொதுமக்களிடையே பேசுகையில் குழந்தைகள் தடுமாறி விழுந்தால் உயிர் போய்விடும் உயிரோட அருமை எனக்கு மட்டும் தெரியும் அதனால் கிணற்றுக்கு தடுப்பு வேலி வெற்றி பெற்றவுடன் சொந்த செலவில் அமைத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது . வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின். கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.1
- மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். விஜயகுமார் நேற்று மாலை வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளரிடம் அப்பகுதியை சேர்ந்த நிர்வாகியின் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் வேட்பாளர் பெயரிலிருந்து ஜெயக்குமார் எனபெயர் வைக்கப்பட்டது.1