Shuru
Apke Nagar Ki App…
வாடிப்பட்டியில் டீக்கடை மாஸ்டர் கடன் சுமையால் தற்கொலை வாடிப்பட்டியில் மெயின்ரோடு பழைய லாலா மிட்டாய் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் சின்னாளபட்டியை சேர்ந்தவர் முத்துமணி ( வயது 51/26) இன்று சுமார் மதியம் ஒரு மணிக்கு கடையின் மேல் மாடியில் தனக்கு தானே சேலையில் தூக்கி மாட்டி உயிரைமாய்துகொண்டதாக கூறப்படுகிறது மேல் மாடியில் கடையில் பணிபுரிபவர் பேச்சியம்மாள் அந்த உடலை பார்த்து தகவல் தங்கத்தின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த மணிகண்டனுக்கு தாமரை செல்வி(42/26) மனைவியும் இரண்டு மகன்களும் ( கல்லூரியில் பயில்கின்றனர்) உள்ளனர் மணிகண்டன் இறப்புக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்
தங்க சுரேஷ்
வாடிப்பட்டியில் டீக்கடை மாஸ்டர் கடன் சுமையால் தற்கொலை வாடிப்பட்டியில் மெயின்ரோடு பழைய லாலா மிட்டாய் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் சின்னாளபட்டியை சேர்ந்தவர் முத்துமணி ( வயது 51/26) இன்று சுமார் மதியம் ஒரு மணிக்கு கடையின் மேல் மாடியில் தனக்கு தானே சேலையில் தூக்கி மாட்டி உயிரைமாய்துகொண்டதாக கூறப்படுகிறது மேல் மாடியில் கடையில் பணிபுரிபவர் பேச்சியம்மாள் அந்த உடலை பார்த்து தகவல் தங்கத்தின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த மணிகண்டனுக்கு தாமரை செல்வி(42/26) மனைவியும் இரண்டு மகன்களும் ( கல்லூரியில் பயில்கின்றனர்) உள்ளனர் மணிகண்டன் இறப்புக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.1
- சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தேனி மாவட்டத்தில் வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலை நிறுத்தம். தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகை உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, குறைந்தபட்ச வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500 வழங்க வேண்டும், 2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500/ மற்றும் டிரைவர் படி ரூ. 800 சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 என தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஜேசிபி, ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் ஹைட்ராலிக் இயந்திரங்களான ஜேசிபி, கிரேன், ஹிட்டாச்சி என பல வகைகளில் 9 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாகவும், பாலம், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாமல் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், வாகன உரிமையாளர் மட்டுமல்லாமல் ஆப்பரேட்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விலை உயர்வை அரசு உட்பட அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கோடு மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். பேட்டி - காந்திராஜன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - ஹைட்ராலிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு)1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2