Shuru
Apke Nagar Ki App…
முறைகேடு எந்த ஒரு ஆய்வு செய்யாமல் லஞ்சத்தின் மூலமாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வீடு வசதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
Mubarak ali
முறைகேடு எந்த ஒரு ஆய்வு செய்யாமல் லஞ்சத்தின் மூலமாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வீடு வசதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
More news from தமிழ்நாடு and nearby areas
- முறைகேடு எந்த ஒரு ஆய்வு செய்யாமல் லஞ்சத்தின் மூலமாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வீடு வசதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது1
- இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற போது தனி அறையில் அடைத்து வைத்து மகன்கள் மற்றும் தாய்யை சித்திரைவதை செய்த ரீட்டா குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அடுத்த அருணாச்சலாநகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் இவர் நையாண்டி நிகழ்ச்சி தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி சந்தோஷ் என்பவர் திருப்பத்தூர் விட்டு வசதி வாரியா பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது ரீட்டா என்பவரின் தூண்டுதலின் பெயரில் ஆனந்தன் சுதாகர், சேட்டு, மணி, ஆகியோரை வைத்து சந்தோஷ் என்பவரை அறையில் அடைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த சந்தோஷின் அண்ணன் நந்தகுமார் அவரது தாயார் விஜயாவை கையை பிடித்து சேலைய இழுத்து இருவரையும் அறையில் உள்ளே தள்ளி அடித்து துன்புறுத்தபட்டனர். இதில் நந்தகுமார் என்பவரை ரீட்டா மற்றும் அவரது குழுவினர் பலமாக தாக்கியத்தில் மயக்க நிலையில் உள்ள நந்தகுமாரை சந்தோஷ் அவரது தாய் விஜயா ஆகியோர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் நையாண்டி தொழில் செய்து வரும் நந்தகுமார் இவருக்கு போட்டியாக ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவர் நீயாமான முறையில் நையாண்டி நிகழ்ச்சிகளை குறைந்த விலையில் பேசி வருவதை கண்ட ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவரை மிரட்டும் வகையில் இனிமேல் நீ எங்கேயும் நிகழ்ச்சி பேச கூடாது இல்லனா உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தும் அடித்தும் உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்ய நந்தகுமாரின் தாயார் விஜயா என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்த போது காவல்துறைனார் நந்தகுமார் தாயார் விஜயவை தகாத வார்த்தையால் பேசி வெளிய போ என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். மேலும் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது குறித்து உடனடியாக உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதியின் பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளராக சி விநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. சி விநாயகம் அவர்களின் புதிய பொறுப்புகள் மற்றும் அவர்களின் பணிகள் குறித்து மேலும் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.1
- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா, தனது கணவர் சதீஷ்குமார் மீது துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக மனு அளித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கௌசல்யா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவை மணந்து கொண்டார். ஆனால், கணவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக சுற்றித் திரிந்து வருவதாகவும், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சதீஷ்குமார் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் தில்லை நகருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பலமுறை கௌசல்யா மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், கௌசல்யா மற்றும் தனது மகள் என்றும் பாராமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கௌசல்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌசல்யா தனது தாய் வீடான தேக்குப்பட்டு கிராமத்திற்கு வந்து தனது பெற்றோருடன் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். 27/07/2026 அன்று, தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது கணவர் சதீஷ்குமார் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நீட் தேர்வுக்கு எதிராக ஆம்பூர் வழக்கறிஞர்கள் இன்று (ஜூலை 27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.3
- காஞ்சிபுரம் மாவட்டம் கிளார் ஊராட்சியில் உள்ள அறம் வளர்நாயகி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கைலாய மலையிலிருந்து தென்திசை நோக்கி வந்த அகத்திய மாமுனிவர் தாமே பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்ட புனிதமான தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. தேவலோக பிரதோஷக் காலமாக கருதப்படும் இந்நாளில், பிரதோஷ வேளையில் அறம் வளர்நாயகி அம்பிகையும் அகத்தீஸ்வர பெருமானும் நந்திதேவருக்கு நடுவே வீற்றிருந்து அருள் பாலித்தனர். இச்சிறப்புமிக்க நாளில் செய்யப்படும் வழிபாடு வழக்கமான வழிபாட்டை விடப் பல மடங்கு புண்ணிய பலன்களைத் தரும் என்பதால், இரவு நேரத்திலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சதாவரம் அரசு இசைப்பள்ளி மற்றும் சிதம்பரம் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலையைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து தேவாரம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து இசைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆன்மீகமும் கலையும் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனிடையே, அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு நிரந்தர பாதை வசதி அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அங்கு திரண்ட பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனமுருகி கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.1
- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வைக் கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.2
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியின் அடிவாரத்தில் உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்ற மகள்களை தந்தையின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் இறுதி சடங்கிற்கு வந்த மகள்களை உறவினர்கள் தாக்கிய காரணம் குறித்து வீடியோவில் விவரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து பரவலான கோபத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பலர் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.1