Shuru
Apke Nagar Ki App…
சித்திரை திருவிழா: வண்டியூரில் சேஷ வாகனத்தில் அழகர் பெருமான். மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நாளான நேற்று ஆற்றில் அழகர் இறங்கினார் .இன்று (மே.2) காலை வண்டியூரில் அழகர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்வு விடிய விடிய நடைபெறும்.
சு.இரத்தினவேல்
சித்திரை திருவிழா: வண்டியூரில் சேஷ வாகனத்தில் அழகர் பெருமான். மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நாளான நேற்று ஆற்றில் அழகர் இறங்கினார் .இன்று (மே.2) காலை வண்டியூரில் அழகர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்வு விடிய விடிய நடைபெறும்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நாளான நேற்று ஆற்றில் அழகர் இறங்கினார் .இன்று (மே.2) காலை வண்டியூரில் அழகர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்வு விடிய விடிய நடைபெறும்.1
- Post by முத்துஇருளன்1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார வள மையம், திருப்பத்தூர் வட்டார வள மையம், அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் விசாலயன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலம் கல்விப் பணியாற்றி ஓய்வுபெறும் முதுகலை வேதியியல் ஆசிரியர் எட்வின் அவர்களுக்கு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேவகோட்டை ஆசிரியர் நல சங்கம், பாரதி தமிழ் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் ,தேவகோட்டை தாலுகா சதுரங்க கழகம், தேவகோட்டை தனி பயிற்சி மையம், தேவகோட்டை கே எம் எஸ் சிந்தனைச் சோலை மற்றும் தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் சிறப்பான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நெகிழ்ச்சியான பாராட்டுரை ராம் நகர் கே எம் எஸ் நூலகம் பகத்சிங் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சக ஆசிரியர்கள், திரு. எட்வின் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையை வெகுவாகப் பாராட்டினர். அவர்கள் பேசுகையில், "வேதியியல் பாடத்தை வெறும் மனப்பாடம் செய்யும் பாடமாக மாற்றாமல், மாணவர்களின் வாழ்வியலோடு இணைத்துச் சொல்லிக் கொடுத்தவர் எட்வின். குறிப்பாக, கடினமான வேதி வினைகளை (Chemical Reactions) மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவர் கையாண்ட விதம் தனித்துவமானது" என்று புகழாரம் சூட்டினர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் எட்வின் அவர்களிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை இன்று உயர்ந்த நிலையில் இருத்துவதற்கு அடித்தளமிட்ட ஆசிரியருக்கு, அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகளை வழங்கித் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.விழாவின் இறுதியில் பேசிய ஆசிரியர் எட்வின், தனது பணிக் காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும், அன்பு காட்டிய மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில் பயின்ற மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஆசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- Post by முத்துஇருளன்1