கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.3
- காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.1
- காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது2
- “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇1
- கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது1
- பாலக்கோடு அருகே ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! பாலக்கோடு அருகே ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழ்கொள்ளூப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் முழங்க மங்கள இசையுடன் பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். . இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.2
- காஞ்சிபுரம் : பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் சினேகா நேரில் ஆய்வு.! உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்ட முகாம் நடைபெற்றது . இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி,சினேகா அவர்கள் காமதேனு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.!1