இரு சக்கர வாகனம் மீது கிரேன் வாகனம் மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இரு சக்கர வாகனம் மீது கிரேன் வாகனம் மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1
- இன்றைய இளைஞர்களின் தலை முறை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நன்றாக பாருங்கள் சினிமா மோகம் அரசியல் இந்த வயதில் நமக்குத் தேவையா என்பதை எந்த இளைஞர்களும் கண்டு கொள்வதில்லை ஆனால் சினிமாவின் மீது பைத்தியமாக அழிவதால் நாம் எதிர்கால வாழ்க்கை பாதிப்பாகிறது. அனைத்து அரசியல்வாதிகளுமே தான் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தான் பார்க்கிறார்கள். அதனால் இதில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் நீங்கள் ஆதரவு அளிப்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம். அனைத்து அரசியல்வாதிகளுமே அரசியலில் சம்பாதித்து தங்களுடைய பணத்தையும் தங்களுடைய குடியுரிமையும் வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள். நாளை நாட்டிற்கு வறுமை வரும்போது தனி ஜெட்டில் பறந்து குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி விடுவார்கள். ஒன்றுமே பிழைக்க வழி இல்லாத ஒரு நாட்டில் நாம் எவ்வாறு வாழ்வது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியின் நம்புவது உங்கள் கையில் உள்ளது. இந்த செய்தி நிச்சயமாக ஒரு அரசியல் பதிவாக இருக்க நான் விரும்பவில்லை அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் குடும்பத்திற்காகவே வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் கல்வி குடும்பம் இதுதான் நம்முடைய வாழ்க்கை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள மட்டுமே இந்த தொகுப்பு ஒரு அரசியல் தலைவரை வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக இந்த செய்தி கிடையாது மற்றொருவருடைய பதிவை எடுத்து தான் இதில் போட்டு இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லக்கூடிய அரசியல் தலைவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை.1
- ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.2
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1