Shuru
Apke Nagar Ki App…
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் லதா தங்கமணி வேட்புமனு தாக்கல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதா தங்கமணி கீழ்வேளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
MAHENDRAN
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் லதா தங்கமணி வேட்புமனு தாக்கல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதா தங்கமணி கீழ்வேளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு வேளாங்கண்ணியிலிருந்து நாகையை நோக்கி ஸ்கார்பியோ வாகனத்தில் ஊட்டியை சேர்ந்த ஹரிஷ் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த நிஜந்த் என்பவரும் பாலசுந்தர் என்பவரும் நாகை ஈசிஆர் சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறி காரில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நிஜந்த் உயிரிழந்தார். மற்றொரு நபர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.இது குறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜவாஹிருல்லா நாகூரில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில் நாகை நகர திமுக செயலாளர் மாரிமுத்து நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் புவனகிரி நகரில் பகுதி பகுதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் சார்பாக முன்னாள் எம்எல்ஏ துரை கி. சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி நகர பகுதியில் வார்டு வார்டாக சென்று அப்பகுதி மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். மக்களை சந்தித்த வேட்பாளர் சரவணன் அனைவருக்கும் சால்வை அறிவித்து மரியாதை செய்தார். இதில் திமுக நகர பொறுப்பாளர் ஜெய் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை அதிகமாக புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 10:20 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதா தங்கமணி கீழ்வேளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.1