Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
கருணாநிதி
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிருந்தா தேவி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியாளராக அருண் தம்புராஜை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்ததை தொடர்ந்து, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்... இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தராஜ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது... இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், வேட்பாளர் கோவிந்தராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்... இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வெற்றி பெற்றால் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டை இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்...1
- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அருகே மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் அமைந்துள்ள மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தும் அதேபோல் ஆண்கள் அக்னி கரகம் எடுத்து வந்தும் வழிபட்டனர்... முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலம்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் அணியப்பட்டு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். மேலும் மஹா ஸ்ரீ ருத்ரவன்னிய சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது... மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...1
- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் பாபநாசத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் ஊர்வலமாக வந்து பாபநாசம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்..ஊர்வலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ், பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், நகர செயலாளர்கள் சீனு, தியாக ரமேஷ், கபிலன், துளசி அய்யா. கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், விசிக மாவட்ட செயலாளர் நதியா, மற்றும் தேமுதிக.முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்,1