Shuru
Apke Nagar Ki App…
முருகன் துணை ஒம் சரவணபவ🙏
Saravanan Vasanthi
முருகன் துணை ஒம் சரவணபவ🙏
More news from Tiruchirappalli and nearby areas
- Post by Saravanan Vasanthi2
- குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.1
- திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது திமுக அவரை மிரட்டினார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி - : நாங்கள் யாரையும் மிரட்டவில்லை திமுக இயக்கத்தை பொருத்தவரையில் ஜனநாயகம் என்பது திமுகவில் தான் பார்க்க முடியும், யாரையும் மிரட்டுகின்ற தன்மையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை, மக்களை அன்பால் வளைத்து அரசியல் செய்கிறோம் தவிர யாரையும் மிரட்டினாங்கள் பேசுவதும் இல்லை அப்படி அரசியல் செய்ததும் இல்லை காங்கிரஸிடம் கெஞ்சி தான் கூட்டணியில் திமுக இருப்பதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு நாங்கள் யாரையும் கெஞ்சவில்லை ஏற்கனவே ஒன்பது ஆண்டு காலமாக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கூட்டணி நீடித்து வருகிறது 9 ஆண்டுகளாக கூட்டணி நீடிப்பது என்பது வரலாறு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வரலாறு மாறும் ஆனால் தற்போது இந்த தேர்தலிலேயே கூட்டணி வந்துவிட்டது அடுத்த தேர்தலிலும் இந்தியா கூட்டணியுடன் தான் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் தான் இருப்போம் 15 ஆண்டுகள் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சனையும் இருக்கப் போவதில்லை, மேலும் இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்று தெரிவித்தார்1
- கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும். இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும். Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்2
- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- Post by Saravanan Vasanthi1