உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தக்கோரி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வைத்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்செங்கோட்டை தலைமை இடமாக வைத்து போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இந்தியா முழுவதும் சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ,வாகன பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட சார்பு தொழில் பணிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் துளைபோட பயன்படுத்தப்படும் காப்பர், ராடு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களின் விலை சந்தை மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுவதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.சீனாவில் இருந்து வரும் காப்பர் மூலப்பொருள் வரத்து நின்றதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் கையிருப்பில் உள்ள காப்பர் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20,000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் குறிப்பாக விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தி ஏஜெண்டுகளிடமும் பொதுமக்களிடமும் போர்வெல் உரிமையாளர்களால் வாங்க முடியவில்லை.இதனால் இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போர்வெல் உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க தற்போது 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுத்து உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் வரை காலவரையற்ற முறையில் தங்களது போராட்டம் தொடரும் என போர்வெல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தக்கோரி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வைத்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்செங்கோட்டை தலைமை இடமாக வைத்து போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இந்தியா முழுவதும் சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ,வாகன பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட சார்பு தொழில் பணிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் துளைபோட பயன்படுத்தப்படும் காப்பர், ராடு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களின் விலை சந்தை மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுவதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.சீனாவில் இருந்து வரும் காப்பர் மூலப்பொருள் வரத்து நின்றதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் கையிருப்பில் உள்ள காப்பர் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20,000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் குறிப்பாக விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தி ஏஜெண்டுகளிடமும் பொதுமக்களிடமும் போர்வெல் உரிமையாளர்களால் வாங்க முடியவில்லை.இதனால் இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போர்வெல் உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க தற்போது 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுத்து உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் வரை காலவரையற்ற முறையில் தங்களது போராட்டம் தொடரும் என போர்வெல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
- குஜிலியம்பாறை: காடம்மநாயக்கனூரில் கார் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பட்டி ஊராட்சி காடம நாயக்கனூரை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 22). இவர் ஒரு காரில் ஆர்.வெள்ளோடு சென்று மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காடமனநாயக்கனூர் பகுதியில் சென்ற பொழுது தலை குப்புற கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.1
- மேட்டுப்பாளையம். சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் இடையே நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காந்தையாற்றில் வெள்ளபெருக்கு.1
- புதுக்கோட்டை: பட்டப்பகலில் தங்க செயினை பறித்த பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த மீமிசல் சாலை விளானூரில் அடையாளம் தெரியாத ஒரு பெண், குழந்தை கழுத்தில் உள்ள செயினை பறித்துள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை சிறைப்பிடித்த கிராம மக்கள் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியம் கோவிலில் ஆங்கிலம் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கறையில் உள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரன் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு மற்றும் இந்த ஆண்டில் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் சிவன் நந்தி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் விபூதி மஞ்சள் பழங்கள் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வண்ணமலர்களால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முருகப்பெருமாள் காலை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களால் தொழில் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை பலம் வந்தனர் அப்போது கோவிலில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது காலை முதல் இரவும் வரை பெரிய குளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்1
- திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது. வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் மற்றொன்று இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது1
- இந்திய விண்வெளியின் புரட்சி நாயகன். யார் இவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.1