Shuru
Apke Nagar Ki App…
இந்திய விண்வெளியின் புரட்சி நாயகன். யார் இவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.
Senthilkumarankumaran
இந்திய விண்வெளியின் புரட்சி நாயகன். யார் இவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியம் கோவிலில் ஆங்கிலம் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கறையில் உள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரன் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு மற்றும் இந்த ஆண்டில் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் சிவன் நந்தி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் விபூதி மஞ்சள் பழங்கள் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வண்ணமலர்களால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முருகப்பெருமாள் காலை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களால் தொழில் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை பலம் வந்தனர் அப்போது கோவிலில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது காலை முதல் இரவும் வரை பெரிய குளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்1
- குஜிலியம்பாறை: காடம்மநாயக்கனூரில் கார் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பட்டி ஊராட்சி காடம நாயக்கனூரை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 22). இவர் ஒரு காரில் ஆர்.வெள்ளோடு சென்று மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காடமனநாயக்கனூர் பகுதியில் சென்ற பொழுது தலை குப்புற கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.1
- லாரி மீது டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து திருப்பத்தூரை சேர்ந்த 34 பக்தர்கள் டிராவல்ஸ் வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அலமேலுபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஈச்சர் லாரியின் மீது டிராவல்ஸ் வாகனம் மோதியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பெங்களூர் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.1
- Post by Moorthi Moorthi2
- என்ன ஒரு அழகான காட்சி. ராமேஸ்வரத்தில் சூரிய உதய காட்சி.1
- புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கலில் முக்கியமான ஒன்றாக உள்ளது. சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், மக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று புத்தாண்டு தினம் மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, சுருளிஅருவியில் உள்ள பூத நாராயணன் கோவில், முருகன் கோயில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் அதிகப்படியாக சுருளி அருவியில் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.1
- திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது. வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் மற்றொன்று இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது1