Shuru
Apke Nagar Ki App…
லாரி மீது டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து திருப்பத்தூரை சேர்ந்த 34 பக்தர்கள் டிராவல்ஸ் வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அலமேலுபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஈச்சர் லாரியின் மீது டிராவல்ஸ் வாகனம் மோதியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
Raja
லாரி மீது டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து திருப்பத்தூரை சேர்ந்த 34 பக்தர்கள் டிராவல்ஸ் வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அலமேலுபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஈச்சர் லாரியின் மீது டிராவல்ஸ் வாகனம் மோதியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
More news from Tamil Nadu and nearby areas
- தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்ராயசாமி பெருமாள் கோயிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்த கோடிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.1
- குஜிலியம்பாறை: காடம்மநாயக்கனூரில் கார் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பட்டி ஊராட்சி காடம நாயக்கனூரை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 22). இவர் ஒரு காரில் ஆர்.வெள்ளோடு சென்று மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காடமனநாயக்கனூர் பகுதியில் சென்ற பொழுது தலை குப்புற கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.1
- நேற்று செம்மொழி பூங்காவில் கூடய மக்கள்.1
- புத்தாண்டை முன்னிட்டு, இனாறு காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சோமாஸ்கந்தருக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.1
- ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம் பழமையான ஒரு நம்பிக்கைப்படி, ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார். 👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால், “ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். 🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை இந்த மலைப்பகுதி, பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு. அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது. இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள். 🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை ஒரு காலத்தில், மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும், அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 🙏 அந்த இரவில், பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி, “பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை. 👉 மறுநாளே நோய் விலகி, அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம் உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை: ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம். அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர். இன்றும், ➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில் ➡️ வைகுண்ட ஏகாதசி நாளில் விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது. 🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை இந்த மலையில், நேர்மையான மனதுடன் பாத யாத்திரையாக (நடந்து) விரதம் இருந்து வழிபட்டால் ✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக: குழந்தை பாக்கியம் நீண்டகால நோய் நீக்கம் வேலை / தொழில் முன்னேற்றம் இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.1
- ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு, நேற்று ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதனால் பரிசல் பயணம் செல்லும் இடத்திலும், அருவிகளில் குளிக்கும் இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்1
- திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது. வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் மற்றொன்று இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது1
- என்ன ஒரு அழகான காட்சி. ராமேஸ்வரத்தில் சூரிய உதய காட்சி.1