Shuru
Apke Nagar Ki App…
பட்டுக்கோட்டை பகுதியில் சாலைகள் தெரியாதவாறு பனிமூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்
Saleem cctv technician
பட்டுக்கோட்டை பகுதியில் சாலைகள் தெரியாதவாறு பனிமூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்
More news from Thanjavur and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்2
- நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.1
- தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த பிப் 28 ம் தேதி துவங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ந்து ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை திருவாரூர் (ஆரூரில் ) சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில்,நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.1
- Post by பெரியசாமி1
- குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் தேமங்கலம் ஊராட்சி ராமர்மடம் கடை தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் சாலை மறியல் போராட்டம் ராஜேஸ்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது.. தேமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை, அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா பயனாளிகள் பெயர்களில் மாற்றம் செய்திடவும் வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.4