Shuru
Apke Nagar Ki App…
புவனகிரி அருகே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி உற்சவம் நடைபெறுகிறது கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் காவடி திருவிழா இன்று நடைபெற்றது ஆலம்பாடி குளக்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி அலகுகளை வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அருளாடி அலகு காவடி பறக்கும் காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி 10 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காவடி உற்சவம் ஊரில் உள்ள வீதிகளில் நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Vembarasi. A
புவனகிரி அருகே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி உற்சவம் நடைபெறுகிறது கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் காவடி திருவிழா இன்று நடைபெற்றது ஆலம்பாடி குளக்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி அலகுகளை வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அருளாடி அலகு காவடி பறக்கும் காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி 10 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காவடி உற்சவம் ஊரில் உள்ள வீதிகளில் நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் சேத்தியாதோப்பு பகுதி சேர்ந்தவர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் புவனகிரி தொகுதி மகாலிங்கம் என்பவர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதன் பிறகு வாக்காளர்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.1
- Post by Roman Reigns1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அதிமுக கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர். கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- Post by Sri ram1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.1
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1