Shuru
Apke Nagar Ki App…
புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Gopi
புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பல்வேறுபகுதியில் இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து கர்நாடகதுணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.காங்கிரஸ் கட்சியின்மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு,முன்னாள் தலைவர் சேகர்,பருகூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அங்கு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்கூட்டியே அனுமதி பெற்றும் போலீசார் தடுத்ததால், உரிமையோடு அன்புமணி ராமதாஸிடம் முறையிடச் சென்றதாக வித்யா ராணி கூறினார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாலும், மாற்றுக் கட்சி பிரச்சாரத்தில் நுழைந்ததாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் கைது செய்யப்பட்ட வித்தியா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1
- Post by சந்திரசேகர். D2
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.1
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- Post by Arasu Malar Editor V.Balamurugan1