logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் திப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் ஒன்று உள்ளது இந்த மைதானத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் காலங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவது வழக்கம்.இந்த ஈத்கா மைதானம்சுற்றிலும் முட் செடிகளாலும் சுற்றுச் சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் தரை தளம் பெயர்ந்தும் இருந்தது இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் தங்களது சொந்தச் செலவில் ஈத்கா மைதானத்தை விரிவாக்கம் செய்து சீரமைத்து கொடுத்தனர் இவ்வாறு சீர் அமைக்கப்பட்ட ஈத்கா மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர்ஈஸ்வரன் நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஈத்கா மினாராவைதிமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் சுபேர்கான் திறந்து வைத்தார்.நிகழ்ச்சி குறித்து அமைக்கப் பட்டிருந்த கல்வெட்டைநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,16 வது வார்டுதிமுக செயலாளர் முத்தவல்லியுமானராஜா முகமது,செயலாளர் ஜாகிர் பாஷா , பொருளாளர் ஷேக் தாவூது,ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.தற்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் திருச்செங்கோடு மற்றும் கொக்கராயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் வீடுகளை இடித்து விட்டதாகவும் அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் வக்பு வாரிய குழு உறுப்பினர் சுபேர்கான் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

2 days ago
user_Balaji studio
Balaji studio
Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
2 days ago
df48d86a-acaa-4da5-9e71-2b5922ffde7c

திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் திப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் ஒன்று உள்ளது இந்த மைதானத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் காலங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவது வழக்கம்.இந்த ஈத்கா மைதானம்சுற்றிலும் முட் செடிகளாலும் சுற்றுச் சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் தரை தளம் பெயர்ந்தும் இருந்தது இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் தங்களது சொந்தச் செலவில் ஈத்கா மைதானத்தை விரிவாக்கம் செய்து சீரமைத்து கொடுத்தனர் இவ்வாறு சீர் அமைக்கப்பட்ட ஈத்கா மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர்ஈஸ்வரன் நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஈத்கா மினாராவைதிமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் சுபேர்கான் திறந்து வைத்தார்.நிகழ்ச்சி குறித்து அமைக்கப் பட்டிருந்த கல்வெட்டைநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,16 வது வார்டுதிமுக செயலாளர் முத்தவல்லியுமானராஜா முகமது,செயலாளர் ஜாகிர் பாஷா , பொருளாளர் ஷேக் தாவூது,ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.தற்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் திருச்செங்கோடு மற்றும் கொக்கராயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் வீடுகளை இடித்து விட்டதாகவும் அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் வக்பு வாரிய குழு உறுப்பினர் சுபேர்கான் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை,
மோளப்பாறை,பனங்காடு,
கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க  கூலி, போக்குவரத்து அடக்கம்.  
விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும்,  இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர்.
பேட்டி : 
1. பழனிச்சாமி...
கரும்பு விவசாயி...
2. கோபால்...
கரும்பு விவசாயி...
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    1
    கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை  மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும்  பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    1
    பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை  
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்
அறம் இலக்கிய அமைப்பு மற்றும் 
அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய  வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு  மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர்  செல்வராணி  வரவேற்று பேசினார்.
கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்  இராஜேந்திர சோழனின்
அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார்.  சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில்  வெளியிட  சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய 
மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது.
சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 
நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை  முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார்.
கல்லூரி மூத்த ஆசிரியர்கள்  ரவி, 
உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன்,
மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் 
நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்,
அறம் இலக்கிய அமைப்பு செயலாளர்  ராசு நன்றியுரையாற்றினார்.
இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    16 min ago
  • தருமபுரி பத்திரிக்கையாளர்கள் ஒன்றினைந்து சமத்துவ பொங்கல் விழா: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு தருமபுரி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒன்றினைத்து இன்று சமத்துவ பொங்களை கொண்டாடினர் தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் வன்ன கோலமிட்டு புதிய பானையில் பொங்கலிட்டு செங்கரும்பு, மஞ்சல் வைத்து சூரியபகவானை வணங்கி சமந்துவ பொங்களை கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு, ரெ.சதிஷ்,தருமபுரி மாவட்ட காவல்கண்கானிப்பாளர் SS மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் KP அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட SP அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்க நிர ஒரே உடையணிந்து, ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது மாலை பத்திரிக்கையாளர்களுக்கு பானை உடைத்தல், மியூசிகள் சேர், போட்டிகளும் நடன கலைநிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை அனைத்து பத்திரிக்கையாளர்கள் மிகச்சிறப்பாக செய்தனர்
    1
    தருமபுரி பத்திரிக்கையாளர்கள் ஒன்றினைந்து சமத்துவ பொங்கல் விழா: 
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு
தருமபுரி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒன்றினைத்து இன்று சமத்துவ பொங்களை கொண்டாடினர்
தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர்
வன்ன கோலமிட்டு புதிய பானையில் பொங்கலிட்டு செங்கரும்பு, மஞ்சல் வைத்து சூரியபகவானை வணங்கி சமந்துவ பொங்களை கொண்டாடினர்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு, ரெ.சதிஷ்,தருமபுரி மாவட்ட காவல்கண்கானிப்பாளர் SS மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் KP அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்
மாவட்ட ஆட்சியர், மாவட்ட SP அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்க நிர ஒரே உடையணிந்து, ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர்
பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது மாலை பத்திரிக்கையாளர்களுக்கு பானை உடைத்தல், மியூசிகள் சேர், போட்டிகளும்
நடன கலைநிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை அனைத்து பத்திரிக்கையாளர்கள் மிகச்சிறப்பாக செய்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    2 hrs ago
  • முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 48 வாரமாக திண்ணை பிரச்சாரம் இன்று அரூர் எம்ஜிஆர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் திமுக அரசால் நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது
    1
    முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர்  திண்ணை பிரச்சாரம்
தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 48 வாரமாக திண்ணை பிரச்சாரம் இன்று அரூர் எம்ஜிஆர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் திமுக அரசால் நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தெரிந்து கொள்வோம்.
    1
    தெரிந்து கொள்வோம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
    1
    எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார்.
எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.