logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*கடைசி நொடியிலும் கடமை மறவாத ஓட்டுநர்* *குடியாத்தம் அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு பணியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்😭*

1 hr ago
user_S prabakaran
S prabakaran
Ambulance service காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு•
1 hr ago

*கடைசி நொடியிலும் கடமை மறவாத ஓட்டுநர்* *குடியாத்தம் அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு பணியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்😭*

More news from தமிழ்நாடு and nearby areas
  • புகலூர் நகர திமுக அண்ணா 118 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி திமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்நாட்டாமலை அடிவாரத்தில் உள்ள கடைவீதியில் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    1
    புகலூர் நகர திமுக அண்ணா 118 வது பிறந்தநாள் நிகழ்ச்சி..
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி திமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்நாட்டாமலை அடிவாரத்தில் உள்ள கடைவீதியில்  அண்ணாவின் திருவருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம். செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் என்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் பாட்டாளி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் சுரேஷ் தலைமையில் கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு மற்றும் 21 சமூகநீதிப் போராட்ட தியாகிகள் தங்களது இன்னுயிரை நீத்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூகநீதி நாளாகவும், தியாகிகள் நினைவு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்ட மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சுரேஷ் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 21 தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய பா.ம.க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் , பாஜகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
    1
    இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம்.
செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் என்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் பாட்டாளி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் சுரேஷ் தலைமையில் 
கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு மற்றும் 21 சமூகநீதிப் போராட்ட தியாகிகள் தங்களது இன்னுயிரை நீத்தனர்.
அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூகநீதி நாளாகவும், தியாகிகள் நினைவு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்ட மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சுரேஷ் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 21 தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய பா.ம.க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் , பாஜகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • புதுச்சத்திரம் அருகே ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்... நாமக்கல் ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்... நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் கிராமத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு பண்ணையம்மன் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். தொடர்ந்து, பண்ணையம்மன் சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பண்ணையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
    1
    புதுச்சத்திரம் அருகே ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்...

நாமக்கல் 
ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்...
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் கிராமத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு பண்ணையம்மன் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.
தொடர்ந்து, பண்ணையம்மன் சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பண்ணையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா...
தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்.....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது.
பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர். வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது 7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
    1
    மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.
வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது
7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார்.
முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு 
முசிறி, செப். 17-
முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் 
முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர்  வழக்கறிஞர்  பத்மராஜ்,  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர்,  எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர்  மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு தாக்கல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    1
    தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு  தாக்கல் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர்  கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய  நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    1
    புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்..
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் பாஜக சார்பில் கரூரில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை – 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் ஆலயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் பாஜக சார்பில் கரூரில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை – 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் ஆலயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார்.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.