logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டு, மின் கணக்கீட்டில் குளறுபடிகள், மின்சார வாரியத்தில் இரவு நேரங்களில் ஆள் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் முன் வைத்து பொதுமக்கள் மற்றும் ஆவுடையார்கோவில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்த இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் சமரசமாக தீர்வு தருவதாக அளித்த வாக்குறிதியின் அடிப்படையில் பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தீர்வு செய்து தருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் அளித்த உத்திரவாதத்தை ஏற்று ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

23 hrs ago
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
23 hrs ago
a01ae0ea-c479-4852-bd0c-c64b62f6c5da
e53eeb96-7c75-4cb2-841a-d601e6a4b895
b3672953-af9a-4be0-8c16-5c4cfeaacee7

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டு, மின் கணக்கீட்டில் குளறுபடிகள், மின்சார வாரியத்தில் இரவு நேரங்களில் ஆள் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் முன் வைத்து பொதுமக்கள் மற்றும் ஆவுடையார்கோவில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்த இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் சமரசமாக தீர்வு தருவதாக அளித்த வாக்குறிதியின் அடிப்படையில் பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தீர்வு செய்து தருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் அளித்த உத்திரவாதத்தை ஏற்று ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காரைக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    1
    காரைக்குடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    1
    தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    1
    முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது
    1
    பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • மணப்பாறையில் இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்! ​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. ​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    1
    மணப்பாறையில் 
 இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்!
​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்
    1
    பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக
தாழ்மையான வேண்டுகோள்.
நாகராஜு பெரியசாமி பிள்ளை
சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர்
நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director
செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்
    user_நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நத்தம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்
    1
    உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள்
உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    1
    துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு 
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). 
இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல்  பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக  இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு  வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.