Shuru
Apke Nagar Ki App…
"My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!" "தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou
Maatram World news Theni
"My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!" "தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.1
- பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம் செய்தார் உடன் மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.4
- 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மட்டும் பணத்தை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிள்ளை செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ளது ப இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் க மற்றும் சாமிமுகம், கால், கை, உருவம், பொருத்திய தங்க நாணயங்கள் உண்டியலில் போடுவதை வழக்கமாக உள்ளது ப இந்நிலையில் இரவு கோவிலின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் இரவு மர்ம நபர்கள் கோவிலின் மதிலில் ஏறி குதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இதேபோன்று தொடர்ந்து தேவதானப்பட்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாலும், இரவு நேரங்களில் முறையாக காவல் துறையினர் ரோந்து பணியில் செல்லாமல் இருப்பதே இது போன்ற திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைராம் நகர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு முருக வேலுக்கு பால், தயிர், இளநீர் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது , பக்தர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது உணவில் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1