logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை பாண்டி கோயிலை முழு​மை​யாக இந்து சமய அறநிலை​யத்​ துறை கட்​டுப்​பாட்​டில் எடுக்கவேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை பாண்​டி கோ​யில் பரம்​பரை பூசாரி உரிமை தொடர்​பாக அறநிலை​யத் துறை பிறப்​பித்த பல்​வேறு உத்​தர​வு​களுக்கு எதி​ராக கோயில் பூசா​ரி​கள் வழக்கு தொடர்ந்​தனர். இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி சீதாலெட்​சுமி, தனம், பாண்​டீஸ்​வரி, ஆர்த்​தி, ஜெகதீஸ்​பாண்​டியன் ஆகி​யோர் உயர் நீதிமன்ற அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். இதை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ரா​மகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: மதத்தை செல்​வம் சேர்க்​கும் போர்​வை​யாக கருதக்​கூ​டாது. பண பலனுக்​காக பக்​தியை வளர்க்​க​வும் முடி​யாது. மதுரை​யின் காவல் தெய்​வ​மாகப் போற்​றப்​படும் பாண்டி முனீஸ்​வரர் கோயில் பூசா​ரி​கள், கடவுளுக்​குச் சேவை செய்​யாமல் தங்​களின் சொந்த ஆதா​யத்​துக்​காக​வும், ஆடம்பர வாழ்​வுக்​காகவும் பக்​தர்​களின் தட்டு காணிக்​கையை​யும், உண்​டியல் வசூலை​யும் பிரிப்​ப​தற்​காக தங்​களுக்​குள் சண்​டை​யி​டு​கின்​ற​னர். இப்​பிரச்​சினை​யால் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்டு மதச்​சூழல் மாசுபடுத்​தப்​பட்​டுள்​ளது. கோயில் நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடப்​பதை அதி​காரி​கள் கண்​டறிந்​துள்​ளனர். இந்த கோயி​லில் தட்டு வசூல் ஆண்​டுக்கு ரூ.1 கோடியை தாண்​டு​வ​தாக​வும், உண்​டியல் வசூல் ஆண்​டுக்கு குறைந்​தது ரூ.4 கோடி வரை இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்த பணம் கோயில் கணக்​கில் வரவு வைக்​காமல் முறை​கே​டாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. உண்​டியல் வசூல் பூசாரி​யின் தனிப்​பட்ட உரிமை அல்ல. அது பக்​தர்​களின் நம்​பிக்கை​யால் குவி​யும் பொது​வான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வரு​மானம் என்​பது​ போல் பங்கு கேட்டு சண்​டை​யிடுவது வேதனை​யானது. அர்ச்சகர் வாழ்​வா​தா​ரத்​துக்​காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்​குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்​கில் தனி நீதிப​தி​யின் உத்​தர​வில் தலை​யிட முடி​யாது. இந்த வழக்​கின் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர்​கள் உட்பட தனி நபர்​கள் யாரும் கோயி​லில் பரம்​பரை பூசா​ரி​யாக உரிமை கோர முடி​யாது. பரம்​பரை அறங்​காவலர்​களை நீக்​குவது தொடர்பாக அறநிலை​யத் துறை 4 வாரத்தில் முடி​வெடுக்க வேண்​டும். கோயில் நிர்​வாகத்தை முழு​மை​யாக அறநிலை​யத்​ துறை கட்​டுப்பாட்​டில் எடுக்க வேண்​டும். மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்றன.

6 hrs ago
user_Arasu Malar Editor V.Balamurugan
Arasu Malar Editor V.Balamurugan
சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
6 hrs ago
3ab54b7e-b9d5-45da-8f89-01987e8ca08b

மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை பாண்டி கோயிலை முழு​மை​யாக இந்து சமய அறநிலை​யத்​ துறை கட்​டுப்​பாட்​டில் எடுக்கவேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை பாண்​டி கோ​யில் பரம்​பரை பூசாரி உரிமை தொடர்​பாக அறநிலை​யத் துறை பிறப்​பித்த பல்​வேறு உத்​தர​வு​களுக்கு எதி​ராக கோயில் பூசா​ரி​கள் வழக்கு தொடர்ந்​தனர். இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி சீதாலெட்​சுமி, தனம், பாண்​டீஸ்​வரி, ஆர்த்​தி, ஜெகதீஸ்​பாண்​டியன் ஆகி​யோர் உயர் நீதிமன்ற அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். இதை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ரா​மகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: மதத்தை செல்​வம் சேர்க்​கும் போர்​வை​யாக கருதக்​கூ​டாது. பண பலனுக்​காக பக்​தியை வளர்க்​க​வும் முடி​யாது. மதுரை​யின் காவல் தெய்​வ​மாகப் போற்​றப்​படும் பாண்டி முனீஸ்​வரர் கோயில் பூசா​ரி​கள், கடவுளுக்​குச் சேவை செய்​யாமல் தங்​களின் சொந்த ஆதா​யத்​துக்​காக​வும், ஆடம்பர வாழ்​வுக்​காகவும் பக்​தர்​களின் தட்டு காணிக்​கையை​யும், உண்​டியல் வசூலை​யும் பிரிப்​ப​தற்​காக தங்​களுக்​குள் சண்​டை​யி​டு​கின்​ற​னர். இப்​பிரச்​சினை​யால் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்டு மதச்​சூழல் மாசுபடுத்​தப்​பட்​டுள்​ளது. கோயில் நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடப்​பதை அதி​காரி​கள் கண்​டறிந்​துள்​ளனர். இந்த கோயி​லில் தட்டு வசூல் ஆண்​டுக்கு ரூ.1 கோடியை தாண்​டு​வ​தாக​வும், உண்​டியல் வசூல் ஆண்​டுக்கு குறைந்​தது ரூ.4 கோடி வரை இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்த பணம் கோயில் கணக்​கில் வரவு வைக்​காமல் முறை​கே​டாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. உண்​டியல் வசூல் பூசாரி​யின் தனிப்​பட்ட உரிமை அல்ல. அது பக்​தர்​களின் நம்​பிக்கை​யால் குவி​யும் பொது​வான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வரு​மானம் என்​பது​ போல் பங்கு கேட்டு சண்​டை​யிடுவது வேதனை​யானது. அர்ச்சகர் வாழ்​வா​தா​ரத்​துக்​காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்​குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்​கில் தனி நீதிப​தி​யின் உத்​தர​வில் தலை​யிட முடி​யாது. இந்த வழக்​கின் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர்​கள் உட்பட தனி நபர்​கள் யாரும் கோயி​லில் பரம்​பரை பூசா​ரி​யாக உரிமை கோர முடி​யாது. பரம்​பரை அறங்​காவலர்​களை நீக்​குவது தொடர்பாக அறநிலை​யத் துறை 4 வாரத்தில் முடி​வெடுக்க வேண்​டும். கோயில் நிர்​வாகத்தை முழு​மை​யாக அறநிலை​யத்​ துறை கட்​டுப்பாட்​டில் எடுக்க வேண்​டும். மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்றன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தயாராக இருங்கள் #admk #KPK #kp
    1
    தயாராக இருங்கள் 
#admk #KPK #kp
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Personal Fitness kuwait jabriya
    7
    Post by Personal Fitness kuwait jabriya
    user_Personal Fitness kuwait jabriya
    Personal Fitness kuwait jabriya
    Yoga instructor திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில்  தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.
விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    2
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.
வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள்  பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், 
உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press
    1
    சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு 
#news #press
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.