மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை பாண்டி கோயிலை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டி கோயில் பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக கோயில் பூசாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சீதாலெட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்த்தி, ஜெகதீஸ்பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இதை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதத்தை செல்வம் சேர்க்கும் போர்வையாக கருதக்கூடாது. பண பலனுக்காக பக்தியை வளர்க்கவும் முடியாது. மதுரையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் பாண்டி முனீஸ்வரர் கோயில் பூசாரிகள், கடவுளுக்குச் சேவை செய்யாமல் தங்களின் சொந்த ஆதாயத்துக்காகவும், ஆடம்பர வாழ்வுக்காகவும் பக்தர்களின் தட்டு காணிக்கையையும், உண்டியல் வசூலையும் பிரிப்பதற்காக தங்களுக்குள் சண்டையிடுகின்றனர். இப்பிரச்சினையால் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு மதச்சூழல் மாசுபடுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோயிலில் தட்டு வசூல் ஆண்டுக்கு ரூ.1 கோடியை தாண்டுவதாகவும், உண்டியல் வசூல் ஆண்டுக்கு குறைந்தது ரூ.4 கோடி வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பணம் கோயில் கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்டியல் வசூல் பூசாரியின் தனிப்பட்ட உரிமை அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கையால் குவியும் பொதுவான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வருமானம் என்பது போல் பங்கு கேட்டு சண்டையிடுவது வேதனையானது. அர்ச்சகர் வாழ்வாதாரத்துக்காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுதாரர்கள் உட்பட தனி நபர்கள் யாரும் கோயிலில் பரம்பரை பூசாரியாக உரிமை கோர முடியாது. பரம்பரை அறங்காவலர்களை நீக்குவது தொடர்பாக அறநிலையத் துறை 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தை முழுமையாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை பாண்டி கோயிலை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டி கோயில் பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக கோயில் பூசாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சீதாலெட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்த்தி, ஜெகதீஸ்பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இதை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதத்தை செல்வம் சேர்க்கும் போர்வையாக கருதக்கூடாது. பண பலனுக்காக பக்தியை வளர்க்கவும் முடியாது. மதுரையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் பாண்டி முனீஸ்வரர் கோயில் பூசாரிகள், கடவுளுக்குச் சேவை செய்யாமல் தங்களின் சொந்த ஆதாயத்துக்காகவும், ஆடம்பர வாழ்வுக்காகவும் பக்தர்களின் தட்டு காணிக்கையையும், உண்டியல் வசூலையும் பிரிப்பதற்காக தங்களுக்குள் சண்டையிடுகின்றனர். இப்பிரச்சினையால் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு மதச்சூழல் மாசுபடுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோயிலில் தட்டு வசூல் ஆண்டுக்கு ரூ.1 கோடியை தாண்டுவதாகவும், உண்டியல் வசூல் ஆண்டுக்கு குறைந்தது ரூ.4 கோடி வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பணம் கோயில் கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்டியல் வசூல் பூசாரியின் தனிப்பட்ட உரிமை அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கையால் குவியும் பொதுவான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வருமானம் என்பது போல் பங்கு கேட்டு சண்டையிடுவது வேதனையானது. அர்ச்சகர் வாழ்வாதாரத்துக்காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுதாரர்கள் உட்பட தனி நபர்கள் யாரும் கோயிலில் பரம்பரை பூசாரியாக உரிமை கோர முடியாது. பரம்பரை அறங்காவலர்களை நீக்குவது தொடர்பாக அறநிலையத் துறை 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தை முழுமையாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
- தயாராக இருங்கள் #admk #KPK #kp1
- Post by Personal Fitness kuwait jabriya7
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- Post by சந்திரசேகர். D2
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press1