Shuru
Apke Nagar Ki App…
சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்
King
சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- சாம்பவர் வடகரை அகஸ்தீஸ்வர் ; சாம்பவர் மூர்த்தி திருக்கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது இதில் தென்காசி அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்1
- Post by N balu Nbalu1
- தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.1
- கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.8
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான பார் கடை மூலம் மத கலவரம் ஏற்படும் அபாயம்; மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபானகடை பார் என்பது பொதுமக்களுக்கு மிக பெரிய இடையூறு தர கூடியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்த பட்ட நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றம் மூலம் அந்த மதுபான கடை திறக்கப்பட்டது. அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மதுபான கடை மூலம் தினம் தினம் பிரச்சினை அரங்கேறி வருகிறது. இன்று இரவு மதுபான பாரில் மது அருந்தி விட்டு சிலர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் இடத்தில் மிக அசிங்கம் பேசி அத்து மீறி உள்ளனர். இதை தட்டி கேட்டவர்களை மத ரீதியாக பேசியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கான பேர் பெரியகுளம் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்து உள்ளனர். தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாடு காவல் துறை தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் தேனி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல் படும் மதுபான பாரை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்ன பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.1
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்1