கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர்
புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார். 2
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் வருசநாடு அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருசநாடு அருகே அமைந்துள்ள அரண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. அதனையடுத்து இன்று காலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர் பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவில் வருசநாடு மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- அமைச்சர்களின் பதிலுரையை முதலில் வழங்குவது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போன்றது : தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.1
- ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தேனி வாசவி மகாலில் 50க்கும் மேற்பட்ட ஆரிய வைசியர்கள் பூணூல் அணிந்தனர் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிராமணர்கள் வைசியர்கள் ஆசாரியார்கள் உள்ளிட்ட பூணூல் அணிந்து கொள்பவர்கள் வேத மந்திரங்கள் முழங்க பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் ஆவணி அவிட்டம் தினத்தை முன்னிட்டு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் ஆரிய வைசியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பழைய பூணூலை அகற்றி ஆச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புதிய பூணூல் அணிந்து கொண்டனர்1
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1