Shuru
Apke Nagar Ki App…
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இரண்டு நாட்களில் மொத்தம் 700 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஜமாபந்தியில் தாசில்தார் பாலாஜி, துணை தாசில்தார் ஹரிஹரன், ஆர்ஐ நாகராஜ், விஏஓ மது முகிலன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Selva
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இரண்டு நாட்களில் மொத்தம் 700 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஜமாபந்தியில் தாசில்தார் பாலாஜி, துணை தாசில்தார் ஹரிஹரன், ஆர்ஐ நாகராஜ், விஏஓ மது முகிலன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக விவேகானந்த சுக்லா இன்று கடலூர் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, கடலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த புதிய எஸ்.பி. விவேகானந்த சுக்லாவை, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்களான கோடீஸ்வரன் மற்றும் ரகுபதி ஆகியோரும், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேனும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.1
- நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் கணேசன் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு 15க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கினார்கள். இக்கூட்டத்தில், ஒன்றிய குழு துணை தலைவர் தேவராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அம்சவேணி, செல்வி ஜெயா, தியாகராஜன், தனலட்சுமி, தேவராஜ், முரளி, சக்தி, தமிழக அரசு, சந்தோஷ், ஆனந்தன், சுதா, கார்த்திகேயன், காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பலரும் இணைந்து கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டது.2
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இன்று காலை முதல் கடுமையான வெயிலும், அதனுடன் புழுக்கமும் நிலவியது. இந்நிலையில், மாலை 6:30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சற்று புவி குளிர்ச்சியடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- சேலம் மாவட்டம் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இரண்டு நாட்களில் மொத்தம் 700 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஜமாபந்தியில் தாசில்தார் பாலாஜி, துணை தாசில்தார் ஹரிஹரன், ஆர்ஐ நாகராஜ், விஏஓ மது முகிலன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.1