இலவசத்தை தவிர்த்து அடிப்படை தேவைகளை செய்து தாருங்கள்.. 2026 தேர்தல் களம் மாண்புமிகு தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளர்களுக்கு, கோவை 92வது டிவிஷன் சுகுணாபுரம் கிழக்கு பகுதியின் பொதுமக்களின் கோரிக்கை மனு. எங்கள் பகுதியில் அடிப்படை தேவையின் பட்டியல். 1) சக்தி விநாயகர் கோயில் வீதியில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடங்கள் உள்ளது, மருத்துவர்கள் இல்லை, முழு நேரமும் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை வேண்டும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணி புரிய வேண்டும். 2) சாக்கடைகள் நிரம்பி தெருவில் செல்லும் அபாயம் அடிக்கடி நடக்கிறது ஆகையால் சாக்கடையின் மூடி அமைத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் 3) கோல்டன் நகரில் பெண்களுக்கான பொது கழிப்பிடம் உள்ளது, அது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது, கட்டனம் கழிப்பிடமாக இருந்தாலும் தூய்மையாக இருக்க வேண்டும், அதேபோல் ஆண்களுக்கும் பொது கழிப்பிடம் ஒன்று வேண்டும். 4) இந்தப் பகுதியில் நாளுக்கு நாள், சட்ட விரோத போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள், இதனால் வழிப்பறிகள், திருட்டுகள், வன்முறைகள், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, இதை சரி செய்யும் வகையில் மக்கள் பாதுகாப்பாக வாழ வழிகாட்டும் வகையில், தெருவுக்குத் தெரு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். 5) மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய தேவையான குடிநீர், இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு கலப்படமாக குடிநீர் வருகிறது, அதுவும் 15 நாள் 20 நாள் கழித்து 2 மணி நேரம் மட்டுமே வருகிறது, குடிக்கும் குடிநீர் எந்த கலப்படமும் இல்லாமல் வாரத்திற்கு இருமுறை மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் கிடைக்க வேண்டும். 6) சாலையோரம் எங்கும் குப்பைகள் நிரம்பியுள்ளது, மக்கள் குப்பைகளை தெருவில் போடுவதற்கு முன் அதை பெறுவதற்கு எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். 7) செந்தமிழ் நகர், பாலமுருகன் கோயில் இரு வீதிகளிலும், சரியான சாலை வசதிகள் இல்லாமலும் சாக்கடை வசதிகளும் இல்லாமலும் அந்தப் பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள், அங்கே சாலைகளும் சாக்கடை வசதிகளும் செய்து தர வேண்டும். 8) செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் சரியான பராமரிப்பு இல்லாமல், சட்டவிரோத செயல்கள் செய்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாது, அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். 9) சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளி உள்ளது, அரசின் முழுமையான அங்கீகாரம் பெற்று அரசு மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும். இதுபோல் அடிப்படை தேவையான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் சார்பாகவும், ஊர் பொதுமக்கள் சார்பாகவும், மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.... 🙏🕉️☪️✝️🤲
இலவசத்தை தவிர்த்து அடிப்படை தேவைகளை செய்து தாருங்கள்.. 2026 தேர்தல் களம் மாண்புமிகு தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளர்களுக்கு, கோவை 92வது டிவிஷன் சுகுணாபுரம் கிழக்கு பகுதியின் பொதுமக்களின் கோரிக்கை மனு. எங்கள் பகுதியில் அடிப்படை தேவையின் பட்டியல். 1) சக்தி விநாயகர் கோயில் வீதியில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடங்கள் உள்ளது, மருத்துவர்கள் இல்லை, முழு நேரமும் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை வேண்டும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணி புரிய வேண்டும். 2) சாக்கடைகள் நிரம்பி தெருவில் செல்லும் அபாயம் அடிக்கடி நடக்கிறது ஆகையால் சாக்கடையின் மூடி அமைத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் 3) கோல்டன் நகரில் பெண்களுக்கான பொது கழிப்பிடம் உள்ளது, அது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது, கட்டனம் கழிப்பிடமாக இருந்தாலும் தூய்மையாக இருக்க வேண்டும், அதேபோல் ஆண்களுக்கும் பொது கழிப்பிடம் ஒன்று வேண்டும். 4) இந்தப் பகுதியில் நாளுக்கு நாள், சட்ட விரோத போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள், இதனால் வழிப்பறிகள், திருட்டுகள், வன்முறைகள், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, இதை சரி செய்யும் வகையில் மக்கள் பாதுகாப்பாக வாழ வழிகாட்டும் வகையில், தெருவுக்குத் தெரு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். 5) மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய தேவையான குடிநீர், இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு கலப்படமாக குடிநீர் வருகிறது, அதுவும் 15 நாள் 20 நாள் கழித்து 2 மணி நேரம் மட்டுமே வருகிறது, குடிக்கும் குடிநீர் எந்த கலப்படமும் இல்லாமல் வாரத்திற்கு இருமுறை மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் கிடைக்க வேண்டும். 6) சாலையோரம் எங்கும் குப்பைகள் நிரம்பியுள்ளது, மக்கள் குப்பைகளை தெருவில் போடுவதற்கு முன் அதை பெறுவதற்கு எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். 7) செந்தமிழ் நகர், பாலமுருகன் கோயில் இரு வீதிகளிலும், சரியான சாலை வசதிகள் இல்லாமலும் சாக்கடை வசதிகளும் இல்லாமலும் அந்தப் பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள், அங்கே சாலைகளும் சாக்கடை வசதிகளும் செய்து தர வேண்டும். 8) செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் சரியான பராமரிப்பு இல்லாமல், சட்டவிரோத செயல்கள் செய்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாது, அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். 9) சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளி உள்ளது, அரசின் முழுமையான அங்கீகாரம் பெற்று அரசு மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும். இதுபோல் அடிப்படை தேவையான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் சார்பாகவும், ஊர் பொதுமக்கள் சார்பாகவும், மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.... 🙏🕉️☪️✝️🤲
- அவிநாசியில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள். சமூக நீதிப் பேசி ஏமாற்றும் திமுகவை பெண்கள் இனி மன்னிக்க மாட்டார்கள் என பேட்டி அளித்தார்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்1
- திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- Post by Subramani Press Reporter Subramani1
- தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1