logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று 10.07.2026 அன்று இரவு 10.30 மணியளவில், இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 18 மூடை பீடி இலைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 17 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

10 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
10 hrs ago
e506bc3e-b664-4e2a-9d02-95696ac16190

தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் தலைமைக்

93a53aa3-bb0b-48eb-9ac4-adf04873f163

காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று 10.07.2026 அன்று இரவு 10.30 மணியளவில், இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ எடை

48880eac-a9cd-4752-b517-35512883be9b

கொண்ட 18 மூடை பீடி இலைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 17 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கரூர் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் (CM) விஜய் ஆற்றிய உரை தற்பொழுது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேடையில் அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தனது வழக்கமான பாணியில் 'புலி உறுமுது' என்ற திரைப்படப் பாடலைப் பாடிப் பேசிய முதலமைச்சர் விஜய், கரூரில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்து கொள்ளையடித்ததன் காரணமாக, இங்குள்ள கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் 'ஓடு.. ஓடு.. ஓடு..' என்று தற்பொழுது பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் எனச் செந்தில்பாலாஜியை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். மேலும், மற்றொருவர் வெளிநாட்டிற்கு ஓடிச் சென்று தலைமறைவாக ஒளிந்துள்ளார் என்றும் அவர் விமர்சித்தார். இதன்போது கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்த முதலமைச்சர் விஜய் சிரித்துக் கொண்டே, 'வெளிநாடு என்றதும் நீங்கள் யாரும் உடனடியாக ஸ்டாலின் என்று நினைத்துவிட வேண்டாம்; எனக்கு ஸ்டாலின் சார் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட பாசமும் மரியாதையும் இருக்கிறது' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
    1
    கரூர் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் (CM) விஜய் ஆற்றிய உரை தற்பொழுது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேடையில் அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தனது வழக்கமான பாணியில் 'புலி உறுமுது' என்ற திரைப்படப் பாடலைப் பாடிப் பேசிய முதலமைச்சர் விஜய், கரூரில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்து கொள்ளையடித்ததன் காரணமாக, இங்குள்ள கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் 'ஓடு.. ஓடு.. ஓடு..' என்று தற்பொழுது பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் எனச் செந்தில்பாலாஜியை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். மேலும், மற்றொருவர் வெளிநாட்டிற்கு ஓடிச் சென்று தலைமறைவாக ஒளிந்துள்ளார் என்றும் அவர் விமர்சித்தார்.

இதன்போது கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்த முதலமைச்சர் விஜய் சிரித்துக் கொண்டே, 'வெளிநாடு என்றதும் நீங்கள் யாரும் உடனடியாக ஸ்டாலின் என்று நினைத்துவிட வேண்டாம்; எனக்கு ஸ்டாலின் சார் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட பாசமும் மரியாதையும் இருக்கிறது' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன. பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன.

பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 min ago
  • தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    1
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    1
    விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அங்கன்வாடி திட்டத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவில் ஓய்வூதிய வசதி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்குதல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் டி. ஜெபராணி மற்றும் மாவட்டச் செயலாளர் எம். சந்திரா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, வரும் 10.07.2026 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அங்கன்வாடி திட்டத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவில் ஓய்வூதிய வசதி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்குதல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் டி. ஜெபராணி மற்றும் மாவட்டச் செயலாளர் எம். சந்திரா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, வரும் 10.07.2026 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    12 hrs ago
  • கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவைப் போற்றும் வகையில், தவெக கட்சியின் சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்ட சதித் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் வரும் தலைமுறைக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவதே இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கரூரில் நடந்த அசம்பாவிதத்தினால் ஏற்பட்ட தீராத சோகத்தின் காரணமாகவே தான் வீட்டில் முடங்கிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். இதனைத் தவறாகச் சித்தரித்து, தான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டதாகத் தன் மீது எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் செய்தார்கள் என்று அவர் வேதனையுடன் சாடினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தற்போது கரூர் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவைப் போற்றும் வகையில், தவெக கட்சியின் சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்ட சதித் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் வரும் தலைமுறைக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவதே இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கரூரில் நடந்த அசம்பாவிதத்தினால் ஏற்பட்ட தீராத சோகத்தின் காரணமாகவே தான் வீட்டில் முடங்கிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். இதனைத் தவறாகச் சித்தரித்து, தான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டதாகத் தன் மீது எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் செய்தார்கள் என்று அவர் வேதனையுடன் சாடினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தற்போது கரூர் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த சுமார் 5,00,000 ரூபாய் மதிப்பிலான ஓடை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஜெபராஜ் மற்றும் செந்தில் ஆகிய இருவர் தொடர்புடையவர்கள் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முத்தையாப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை தரப்பில் காலதாமதம் செய்யப்படுவதால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, உண்மை நிலையை விசாரித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் புகார்தாரரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவரும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த சுமார் 5,00,000 ரூபாய் மதிப்பிலான ஓடை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஜெபராஜ் மற்றும் செந்தில் ஆகிய இருவர் தொடர்புடையவர்கள் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முத்தையாப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை தரப்பில் காலதாமதம் செய்யப்படுவதால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, உண்மை நிலையை விசாரித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் புகார்தாரரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவரும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.