Shuru
Apke Nagar Ki App…
அன்பரசு
- Duhtehu ndmAlangudi, Pudukkottai🙏2 days ago
- User10405Vilavancode, Kanniyakumari💐5 days ago
- User10405Vilavancode, Kanniyakumari🥳5 days ago
- User10405Vilavancode, Kanniyakumari💐5 days ago
- SureshKundrathur, Kanchipuram🙏5 days ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பின்பு ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி தொகுதியின் கள நிலவரங்களை கேட்டறிந்தார்1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சேத்துமடை,அண்ணாநகர்,கோழிப்பண்ணை தேவிபட்டினம்,வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது! #BJP#ADMk#1
- தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்... இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தராஜ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது... இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், வேட்பாளர் கோவிந்தராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்... இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வெற்றி பெற்றால் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டை இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்...1
- கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.3
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை முதல் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதற்காக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காலேஜ் விளக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அருகே மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் அமைந்துள்ள மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தும் அதேபோல் ஆண்கள் அக்னி கரகம் எடுத்து வந்தும் வழிபட்டனர்... முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலம்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் அணியப்பட்டு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். மேலும் மஹா ஸ்ரீ ருத்ரவன்னிய சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது... மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...1