விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில் இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில் இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில் இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1
- சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்! விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிரதிஷ்டை செய்த சிலைகளை கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏரியில் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு1
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- கரூரில் ADMK வடக்கு பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா கரூர் மாவட்டம் அதிமுக வடக்கு பகுதி சார்பில் இன்று அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் மாவட்ட கழக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக வடக்குப் பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அருண் டெக்ஸ் தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணன் வடக்கு பகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மணி வார்டு செயலாளர்கள் சரவணன்.பிரபு. சுப்பிரமணி.மகாமுனி.. வடக்கு பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைராஜன் இந்தியன் கார்த்திக்.ராஜா.மகேஷ்.பெரியசாமி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்1
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1