உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம் தூத்துக்குடி: ஆக 25 எட்டயபுரம் சாலையில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து விவசாய அணி கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1 ) விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 மூலம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் விவசாயிகளின் வயல்வெளிகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அரசு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தரும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 2 ) பிரதமர் கிஷான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு முகாம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களைத் திட்டத்தில் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 3 ) அதேபோல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஒருவர் கலந்து கொண்டு, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல் தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாய அணி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். கூட்டத்தில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய கட்சி நிர்வாகிகள் கிராமப்புறங்களில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம் தூத்துக்குடி: ஆக 25 எட்டயபுரம் சாலையில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து விவசாய அணி கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1 ) விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 மூலம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் விவசாயிகளின் வயல்வெளிகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அரசு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தரும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 2 ) பிரதமர் கிஷான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு முகாம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களைத் திட்டத்தில் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 3 ) அதேபோல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஒருவர் கலந்து கொண்டு, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல் தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாய அணி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். கூட்டத்தில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய கட்சி நிர்வாகிகள் கிராமப்புறங்களில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
- தூத்துக்குடியில் ஆகஸ்டு 27 இல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது *சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி புத்தக் கண்காட்சி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், அறிவியல், பொது அறிவு, போட்டி தேர்வு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. கண்காட்சியின் நோக்கம் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி காலை புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மாணவ மாணவிகளுக்காக தினசரி கட்டுரை போட்டி திருக்குறள் போட்டி ஓவியப்பட்டி கதை எழுத போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளது என தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் ராஜபாண்டி மற்றும் ரவிவர்மன் ஆகியோர் தெரிவித்தார்.1
- தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை தேர்வு செய்யாமல் தோல்வியடைந்த மாணவனை தேர்வு செய்து முறைகேடு செய்து வருகிறார்கள் கல்வித் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?1
- ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . மறைந்த தேமுதிக நிர்வாகிகளான ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- தூத்துக்குடி பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்க ஆலோசனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று பள்ளி கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறையினர் உள்ளிட்ட அரசு துறையினர் ஒன்றிணைந்து மாவட்டத்தில் பள்ளிகளில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது1