Shuru
Apke Nagar Ki App…
கொடைக்கானலில் பயங்கர ஆயுதங்களுடன் இணையத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்திய வாலிபர் கைது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் இணையத்தில் மீம்ஸ் எடுப்பதற்காக மேல்மலை, பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இது குறித்து சம்பவம் மறைந்த கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு இணையதளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
RAJA news
கொடைக்கானலில் பயங்கர ஆயுதங்களுடன் இணையத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்திய வாலிபர் கைது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் இணையத்தில் மீம்ஸ் எடுப்பதற்காக மேல்மலை, பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இது குறித்து சம்பவம் மறைந்த கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு இணையதளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
- RAJA newsஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு😡2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் இணையத்தில் மீம்ஸ் எடுப்பதற்காக மேல்மலை, பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இது குறித்து சம்பவம் மறைந்த கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு இணையதளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.1
- திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார். திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார். அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் இத்திரு கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஒட்டி தேரோட்டம் உத்தமபாளையம் நகரில் ரத வீதிகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கோவில் மாசி மகா திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 02ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மாசி மகா தேரோட்ட திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது வேத மந்திரங்கள் முழங்க சிவவாத்தியத்துடன் இக்கோடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.1
- மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1
- மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் தீவிரம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வஞ்சிக்கப்படும் விரிவுரையாளர்கள். மதுரை, பிப்.19– மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ (தொகுப்பூதிய) விரிவுரையாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். UGC நிர்ணயித்த Rs.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎ ப் மற்றும் இபிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கோரி அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளின் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற மாணவி அகிலா கூறியதாவது: “எங்களின் கல்வியே பாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆசிரியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; எங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம். இரண்டாம் பருவ மாணவிகளுக்கு முறையான வகுப்பறைகள் கூட இல்லை. மரத்தடியில் அமர்ந்து பாடம் கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் போராடும் வரை நாங்களும் அவர்களுடன் இருப்போம்,” என்றார். மற்றொரு மாணவி விக்னேஷ்வரி கூறுகையில், “எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். போட்டித் தேர்வுகளுக்கும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் துணை நிற்கும் அவர்கள் உரிய ஊதியம் பெற வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் கல்வி நடைபெறுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் ஆதரவு தொடரும்,” என்றார். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். கல்லூரியில் நடைபெற்று வரும் இப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி.டேவிட் ராஜதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் அகிலா மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகமணிகண்டன், திருப்பரலாதன், கண்ணன், அமல், ஆகியோர் கலந்து கொண்டனர்.3
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பெரிய பள்ளிவாசலில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு காலத்தின் முதல் தொழுகையை பெரிய பள்ளிவாசலில் தொழுதனர். இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.1