விசிக நிர்வாகி பாவரசு படத்திறப்பு நிகழ்வு: திருமாவளவன் பங்கேற்பு மதுரை: விசிக முன்னாள் நிர்வாகி ஏசி பாவரசுவின் உருவப் படம் திறப்பு மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று, பாவரசுவின் படத்தை திறந்து வைத்தார். மதுரையில் மறைந்த ஏசி பாவரசு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது. கட்சித் தலைவர் திருமாவளவன், பாவரசுவின் மகள் செந்தமிழ் நிலாவிடம் இந்த நிதியை வழங்கினார். அப்போது பேசிய அவர், பாவரசு போன்றவர்களின் குடும்பத்தை காப்பது கட்சியின் கடமை என்றார். மறைந்த பாவரசுவின் சகோதரர் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இவர், தன் தம்பியைப் போலவே விளிம்புநிலை மற்றும் உழைப்பாளி மக்களுக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
விசிக நிர்வாகி பாவரசு படத்திறப்பு நிகழ்வு: திருமாவளவன் பங்கேற்பு மதுரை: விசிக முன்னாள் நிர்வாகி ஏசி பாவரசுவின் உருவப் படம் திறப்பு மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று, பாவரசுவின் படத்தை திறந்து வைத்தார். மதுரையில் மறைந்த ஏசி பாவரசு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது. கட்சித் தலைவர் திருமாவளவன், பாவரசுவின் மகள் செந்தமிழ் நிலாவிடம் இந்த நிதியை வழங்கினார். அப்போது பேசிய அவர், பாவரசு போன்றவர்களின் குடும்பத்தை காப்பது கட்சியின் கடமை என்றார். மறைந்த பாவரசுவின் சகோதரர் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இவர், தன் தம்பியைப் போலவே விளிம்புநிலை மற்றும் உழைப்பாளி மக்களுக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது. விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து. பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி1
- சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்2
- சிவகங்கையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் தனியாக போட்டியிடவில்லை. தனித்து விடப்பட்டுள்ளார் என்றவர், விஜய் பிரச்சாரத்தின் போது காரில் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றார். விஜய் வரவால் அரசியலில் தாக்கம் ஏற்படும் என கூறிய டி டி வி கூறியதற்கு, டிடிவி அரசியலுக்கு வரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என கூறினார். தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய டிடிவி, இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். அதுபோலத்தான் என விமர்சனம் செய்தார். வாஜ்பாயின் பாஜகவிற்கும் நரேந்திர மோடியின் பாஜகவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. வாஜ்பாய் மதத்தை வைத்து மக்களை பிரிக்கின்ற செயலை செய்யவில்லை. ஆதலால் கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வாஜ்பாய்க்கு ஆதரவளித்தனர் . அதிமுகவின் அடிப்படை விதியினை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. தான் செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக கட்சியை பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார் என குற்றம் சாட்டியவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் விடை கொடுப்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து, எல்லா ஆட்சியிலும் போதை பொருள் பழக்கங்கள் உள்ளன என்றவர், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் வரும்போது சோம பானம் என அதனை கொண்டு வந்தாக கூறினார். சிவகங்கைத் தொகுதியை காரைக்குடியை விட அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டுவேன். மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை போய்விட்டது. தற்போது ஒத்த இலை மட்டுமே உள்ளது. அதுவும் பிஜேபியின் தாமரையில் முடங்கிப் போய் கிடக்கிறது. எனவே தமிழக மக்கள் இரட்டை இலையும் பிஜேபியும் நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என கருணாஸ் தெரிவித்தார்.1
- 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.7
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1