logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை அருகே தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட எதிர் துருவ வேட்பாளர்கள் அரசியல் நாகரிகத்தோடு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது காண்போரை வியக்கச் செய்தது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது

2 hrs ago
user_Chakravarthy
Chakravarthy
Nagapattinam, Tamil Nadu•
2 hrs ago

நாகை அருகே தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட எதிர் துருவ வேட்பாளர்கள் அரசியல் நாகரிகத்தோடு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது காண்போரை வியக்கச் செய்தது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது

More news from Tamil Nadu and nearby areas
  • நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    1
    நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு  கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்  நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்,  அகிலாண்டேஸ்வரி அம்பாளை,  தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    1
    குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்  நடந்தது 
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான
அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது.
அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்,  அகிலாண்டேஸ்வரி அம்பாளை,  தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். 
தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முக்கிய நிகழ்வுகள்: திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    1
    திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று  நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முக்கிய நிகழ்வுகள்:
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்:
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாநகரக் கழகச் செயலாளர் 
மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான்.  அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். 
இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், 
எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops,  TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். 
எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. 
எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது.  எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார்.
அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை  ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    1
    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர்  ...
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    11 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    1
    நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.