தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 கோடி முதலீட்டை ஈர்த்து, 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2,570 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். ஆயத்த தொழிற்கூட வசதிகள்: தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூடங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் (ஓமந்தூர்): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,200 வேலைவாய்ப்புகளுடன் 229 ஏக்கரில் தொழிற்பூங்கா. நாமக்கல் (லத்துவாடி): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,500 வேலைவாய்ப்புகளுடன் 245 ஏக்கரில் தொழிற்பூங்கா. புதுக்கோட்டை (திரப்பிடாங்கி): ஆவுடையார்கோவில் வட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் ஆயத்த தொழிற்கூட வசதியுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா. மழைக்கால நிவாரண உயர்வு: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,000 குடும்பங்கள் பயனடைவர். வெற்றி மகளிர் திட்டம்: மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.500 கோடி கடனுடவி வழங்கப்பட்டு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சிவகாசி பைரோடெக்னிக்ஸ் மையம்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ரூ.2 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். டிஜிட்டல் மனை ஒதுக்கீடு: சிப்காட் தொழிற்பூங்காக்களில் மனைகள் ஒதுக்கீட்டை 100% வெளிப்படைத்தன்மையுடன் மாற்றவும், முப்பரிமாணக் (3D) காட்சிப்படுத்தலை வழங்கவும் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 கோடி முதலீட்டை ஈர்த்து, 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2,570 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். ஆயத்த தொழிற்கூட வசதிகள்: தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூடங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் (ஓமந்தூர்): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,200 வேலைவாய்ப்புகளுடன் 229 ஏக்கரில் தொழிற்பூங்கா. நாமக்கல் (லத்துவாடி): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,500 வேலைவாய்ப்புகளுடன் 245 ஏக்கரில் தொழிற்பூங்கா. புதுக்கோட்டை (திரப்பிடாங்கி): ஆவுடையார்கோவில் வட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் ஆயத்த தொழிற்கூட வசதியுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா. மழைக்கால நிவாரண உயர்வு: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,000 குடும்பங்கள் பயனடைவர். வெற்றி மகளிர் திட்டம்: மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.500 கோடி கடனுடவி வழங்கப்பட்டு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சிவகாசி பைரோடெக்னிக்ஸ் மையம்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ரூ.2 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். டிஜிட்டல் மனை ஒதுக்கீடு: சிப்காட் தொழிற்பூங்காக்களில் மனைகள் ஒதுக்கீட்டை 100% வெளிப்படைத்தன்மையுடன் மாற்றவும், முப்பரிமாணக் (3D) காட்சிப்படுத்தலை வழங்கவும் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
- பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டம் பாதுகாப்பாக உள்ளது அந்த பாதுகாப்பே சில பெண்களுக்கு வாழ்க்கையின் கேள்வி புரியும் உள்ளாக்குகிறது நான் மேஜர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்வேன் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம் இன்று பெற்றவர்கள் உற்றார் உறவினர் கூறும் அறிவுரைகள் கசப்பாக இருக்கும் அது வாழ்விற்கு உறுதுணையாக தேனாக இனிக்கும் சரியான தேர்வு செய்யாத நபர்களின் பேச்சு அந்த நேரத்தில் தேனாக இருக்கும் ஆனால் வாழ்வு கசக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் வளரும் வரை அதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து வரும் போது வாலிப வயதில் உணர்ச்சி தூண்டுதலால் தவறான தேர்வு செய்யும் போது பெற்றோரின் அறிவுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தேவையில்லாததாக தெரிகிறது வாழ்வில் முட்டி மோதி நிற்கும் போது தனது பெற்றோரின் அறிவுரைகள் அப்பொழுதுதான் புரியும் ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும் யோசியுங்கள் பெண்களே யோசியுங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்துடன் அன்னூர் அருணாச்சலம் ஆச்சாரி1
- கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடா அதிபதிக்கு சதய விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்தானந்தபுரம் மடத்தில் உள்ள மடாதிபதி சொரூபானந்த சுவாமிகளுக்கு சதய விழாவை முன்னிட்டு கணபதி பூஜை மற்றும் ஆயுள் விருத்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து மடத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது பின்னர் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது இதனால் ஐந்தருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது1
- சிறு தொண்டு நல்லூர் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் கோயில் கொடை விழா சப்பரபவனி விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில் ஆவணி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பொன் சப்பரத்தில் நகர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை தீர்த்தவாரி நடைபெற்றது முளைப்பாறியிட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் கும்மி அடித்து பூஜை செய்தனர். மதியக்கொடை கயிறு குத்தி ஆடுதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இரவு சப்பரபவனியை யொட்டி வான வேடிக்கை நடைபெற்றது செண்டை மேளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க அம்பாள் பொன் சப்பரத்தில் சிறுத் தொண்டநல்லூர் வீதிகளில் ஊர் வலமாக வந்து பக்தருக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அம்மனை சேவித்து தேங்காய் பழம் உடைத்தனர் காலை 7 மணி அளவில் சப்பரம் கோயிலைச் சென்றடையும். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கொடை விழா நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது1
- நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1