Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவும் வில்லன் போன்ற ஸ்டாலின் முகத்தின் ரியாக்ஷன்
RAJA news
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவும் வில்லன் போன்ற ஸ்டாலின் முகத்தின் ரியாக்ஷன்
More news from Dindigul and nearby areas
- Post by G.thangarasu1
- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர் லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் *பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம் வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை1
- மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.3
- விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம் கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இறுதியில் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.1
- Post by அன்பரசு1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- மதுரை: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து திமுகவினர் இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு வர்ணத்தை பூசினர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ரயில்வே நிர்வாகம், தற்போது சர்ச்சைக்குரிய அந்த இந்திப் பெயரை அப்புறப்படுத்தியுள்ளது. அங்கு மீண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.1
- Post by பெரியசாமி1
- சேலம் அஸ்தம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நேற்று இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த சருகுகளில் தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். அவர்களின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1