விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.09.2026) கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் முகாமானது இன்று 16.09.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 17.09.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று(16.09.2026) இராஜபாளையம் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள், இராஜபாளையம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கீழ் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant - STP) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இராஜபாளையம் நகரின் 11.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து அங்கிருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் தினமும் 21.85 MLD (2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்) கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2050-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் கழிவு நீரை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளில் 47,497 வீடுகள் மற்றும் 5,876 வணிக வளாகங்களில் இருந்து நாள்தோறும் 26.84 மெட்ரிக் டன் மக்கும் குப்பை, 21.66 மெட்ரிக் டன் மக்காத குப்பை என மொத்தம் 48.5 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது. இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.15 கோடி மதிப்பில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இராஜபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 7400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கிடங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிட்டங்கியில் BR Grade A Rice - 1736 MTs, BR Grade C Rice - 694 MTs, Raw Paddy Grade A - 230 MTs, Raw Paddy Grade C - 1117 MTs உள்ளிட்ட பொருட்கள் தற்போது இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6400/- மதிப்பிலான 3 காதொலிக்கருவிகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1400/- மதிப்பிலான மடக்குக்குச்சி என மொத்தம் ரூ.22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் இ.ஆ.ப., மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, இராஜபாளையம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.09.2026) கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் முகாமானது இன்று 16.09.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 17.09.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று(16.09.2026)
இராஜபாளையம் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள், இராஜபாளையம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கீழ் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant - STP) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இராஜபாளையம் நகரின் 11.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து அங்கிருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் தினமும் 21.85 MLD (2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்) கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2050-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு கூடுதல்
கழிவு நீரை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளில் 47,497 வீடுகள் மற்றும் 5,876 வணிக வளாகங்களில் இருந்து நாள்தோறும் 26.84 மெட்ரிக் டன் மக்கும் குப்பை, 21.66 மெட்ரிக் டன் மக்காத குப்பை என மொத்தம் 48.5 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது. இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.15 கோடி மதிப்பில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இராஜபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 7400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கிடங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிட்டங்கியில் BR Grade A Rice - 1736 MTs, BR Grade C Rice - 694 MTs, Raw Paddy Grade A - 230 MTs, Raw Paddy Grade C - 1117 MTs உள்ளிட்ட பொருட்கள் தற்போது இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6400/- மதிப்பிலான 3 காதொலிக்கருவிகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1400/- மதிப்பிலான மடக்குக்குச்சி என மொத்தம் ரூ.22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் இ.ஆ.ப., மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, இராஜபாளையம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டத்தில் எம்.பி, அமைச்சர் பங்கேற்பு. மதுரை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு (Airport Advisory Committee) கூட்டம் நடைபெற்றது. இதில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விமான நிலைய இயக்குநர் முத்துக்கமார், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் கூறுகையில் மதுரை ஏர்போர்ட்னுடைய அடுத்தகட்ட வளர்ச்சியில, இந்த புதிய அரசு மிக பெரிய அளவில் வேகமாக, மக்களை பாதிக்காத அளவிலும், அதே நேரத்தில் மக்களுடைய தேவைகளை உணர்ந்தும், மதுரை ஏர்போர்ட்டுக்குள் வளர்ச்சிப் பணிகளை பற்றி ஆய்வு செய்தோம். சில விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மதுரைக்கு புதிய விமானங்கள் வர வேண்டும் என்பதும், அதே நேரத்தில், சில மக்களை பாதிக்காத அளவில் இந்த திட்டத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றியும் பேசுவோம். நிலம் கையகப்படுத்தல் பணி 97% நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்; அதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சியில மாநில அரசு தன்னுடைய பங்காக, பஸ் பெசிலிட்டிஸ் உருவாக்குறதா இருந்தாலும் சரி, மற்றும் சுற்றுலாத் துறையினுடைய வளர்ச்சியா இருந்தாலும் சரி, அது அனைத்தையும் அமைச்சர் முதல்முறையாக இந்த குழுவுல இருக்கிறதுனால, மதுரை விமான நிலையத்தினுடைய குழுவுல பல ஆண்டுகளுக்கு பின்னால—ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு அமைச்சர் இந்த குழுவுல இருக்கிறார் என்பதால் இந்த வளர்ச்சி பணி வேகப்படும். இது ஒரு நிறைவைத் தருகிறது. மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சிப் பணிகள் சரியான திசையில் போக ஆரம்பிச்சிருக்கு. அதே மாதிரி, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்ள மதுரையினுடைய புதிய ரிங் ரோடு அமைப்பதற்கான பணி முடிவடையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதற்கு பிறகு தான் மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் நடக்கும். ஆக மொத்தம், இது ஏறக்குறைய இன்னும் ஒரு இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் எல்லாம் ஒரு நிலைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கு. சர்வதேச விமானங்கள் வந்து ரத்து செய்யப்பட்டிருக்குதா? சர்வதேச விமான நிலையமா அறிவிக்கப்பட்டதுக்கு அப்புறம், இரண்டு மூணு விமானங்கள்... சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயர் இருக்கு, அதே மாதிரி துபாய்... ரத்து செய்யப்பட்டிருக்கு குறித்த கேள்விக்கு: ரெண்டுக்குமே வேற வேற காரணங்கள். முதலில் துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் ஓட பிரச்சனை, அந்த கம்பெனியோட பிரச்சனை. எல்லாமே லாபத்துக்காக வர்ற ஏர்லைன்ஸ். ஏர்லைன்ஸ் யாருமே ஃப்ரீயா நடத்தல. ஏர் இந்தியா முதல்ல வந்து கவர்மெண்ட் நடத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு ஆர்கனைசேஷனா இருக்கும் போது, அது வந்து நஷ்டத்துக்கு ஏற்படுத்தலாம், மக்களுடைய நலனுக்காக கொண்டு வரலாம். ஆனா இப்ப லாபத்துக்காகத்தான் எல்லா நிறுவனங்களும் வரப்போகுது. இதுல ஸ்பைஸ்ஜெட் அவர்களின் பிரச்சனைகளுக்காக துபாயில் சர்வீஸை கட் பண்ணிட்டாங்க. சிங்கப்பூர் போன கூட்டத்துக்கு முன்னாடியே நாங்க போய் பார்த்தோம். நானும் எம்.பி.யும் போய் பார்த்தோம். அவங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸினுடைய நிர்வாகிகளை... எம்.டி.யை போய் சென்னை, டெல்லியில பார்த்தோம். அப்பொழுது அவர்கள் சொன்னது, அவர்களுடைய டைம் ஸ்லாட்ஸ் சேஞ்ச் பண்ணதுனால மிக பெரிய அளவுல அதுல பேசஞ்சர் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. அதை திருச்சிக்கு மாத்திட்டாங்க. இப்ப திருப்பியும் போய் நாங்க ஏர் இந்தியா, மிக அதிர்ச்சியா இருந்தது என்னவென்றால், ஏர் இந்தியாவினுடைய express வர்ற ஃபிளைட்டை நிப்பாட்டிட்டு, ஏர் எக்ஸ்பிரஸா மாத்திட்டாங்க. இதெல்லாம் அரசாங்க நிலையில இருக்கும் போது இதெல்லாம் மாத்த விடாம ஆக்கலாம். இப்ப வந்து பிரைவேட் கம்பெனிங்கிறதுனால நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. நம்ம போய் கோரிக்கைதான் வைக்க முடியும். அவங்ககிட்ட சொல்ல முடியும் மார்க்கெட் இருக்குங்கிறதை. அதை இந்தத் தடவை மீண்டும் நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போய் ஏர் இந்தியாவினுடைய நிர்வாகத்தை சந்தித்து பேசுவோம். திருப்பரங்குன்றம் தொகுதி வந்து எய்ம்ஸும் கனவாவே இருக்கு, மதுரை விமான நிலைய விரிவாக்கமும் நீண்ட கனவாவே இருக்கு. அது எப்போது நடைமுறைக்கு வரும் அமைச்சர் வந்துட்டாருல்ல, அதனால இனிமே கனவு நனவாயிரும்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் போராடிக்கிட்டேதான் இருக்கோம். இப்ப உங்க எல்லாருக்கும் தெரியும், எய்ம்ஸைப் பொறுத்தவரைக்கும் 80% எப்பவோ முடிச்சிட்டாங்க. 2022-லேயே முடிச்சிட்டாங்க. எய்ம்ஸினுடைய 80% நட்டா வந்து அனவுன்ஸ் பண்ணாரு. இப்பதான் 80% வந்துருக்காம், 85% முடிஞ்சிருக்கு. எய்ம்ஸையும் போய் ஒரு தடவை நடுவுல ஆய்வு செஞ்சு, அமைச்சரோட சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களோட போய் பார்த்து அதையும் அப்டேட் பண்ணுவோம். எங்களைப் பொறுத்தமட்டிலும் எய்ம்ஸும் சரி, மதுரை ஏர்போர்ட்டும் சரி மிக முக்கியமானது இந்த திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய வளர்ச்சியில. அதே மாதிரி மதுரையினுடைய, தென் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில இது ரெண்டும் பெரிய மைல்ஸ்டோன். இது இரண்டையும் நிறைவேற்ற வைக்க வேண்டியது எங்க எல்லாரோட கடமை." இந்த மீட்டிங்ல வந்து பிசினஸ் பீப்பிள்ஸ் யாராவது கலந்துகிட்டாங்களா? ஏன்னா இங்க கார்கோ மூலமா இம்போர்ட், எக்ஸ்போர்ட் வந்து அவங்கதான் ரொம்ப பெரிய அளவுல எதிர்பார்த்தாங்க இன்டர்நேஷனல் அந்தஸ்து வந்தா. அவங்ககிட்ட எதுவும் மீட்டிங்ல கன்சல்ட் பேசினாங்களா எல்லாருக்கும் மெம்பர் புதுசா மெம்பர்ஷிப் போட்டிருக்கோம். மெம்பர்ஸ் ஆட் பண்ணிருக்கோம். சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து ஜெகதீசன் அதுல அதனுடைய பிரதிநிதியா இருக்காரு. விருதுநகர் சேம்பர்ல இருந்து ஸ்ரீராம் ராஜா சார் இருக்காரு. இந்த முறை போன வருடங்களை விட இந்தத் தடவை கார்கோவினுடைய நம்பர்ஸ் வந்து கூடியிருக்கு. மத்த எல்லாத்துலயும் பேசஞ்சர்ஸோட நம்பர் குறைஞ்சிருக்கு. ஏன் கேட்டீங்கன்னா ஏ.டி.ஆர். ஃபிளைட் குறைஞ்சதுனால, பெரிய ஃபிளைட்ஸ் வந்ததுனாலயும்... பெரிய கேப் இருக்கு, அதனால அதை வந்து ஒரு 10,000 பேசஞ்சர்ஸோட இந்தத் தடவை ஃபுட்பால் வந்து குறைஞ்சிருக்கு. விரிவாக்கத்திற்காக இந்த ரோடும் மாற்றி அமைக்கப்படுமா? இல்ல அண்டர்கிரவுண்ட் பாஸ் மாதிரி போகுதா அதைத்தான் நான் சொன்னேன். புதிய ரிங் ரோடு அமைக்கின்ற பணி இன்னும் ரெண்டு வருஷத்துல கம்ப்ளீட் பண்ணிருவோம். அதனால ரோடுதான் அமைக்கப்போறாங்க... ரிங் ரோடுதான் அமைக்கப்போறாங்க. கம்பிகுடி கால்வாய்... அதை மாற்றும் திட்டத்துல கொண்டு வந்திருக்கீங்களா? அந்த புராஜெக்ட் இதுல இல்லையா எல்லாமே ஒரு நிலைக்கு வந்துகிட்டு இருக்கு. இப்ப அமைச்சர் வந்திருக்கிறதுனால அது எல்லாத்தையும் கொஞ்சம் ஃபாஸ்ட் பண்ணி, மக்களை பாதிக்காத அளவுல அதை கொண்டு வருவதற்காக அமைச்சர் இருக்காரு. பணிகள் எப்போது தொடங்கும் சார்? இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள அந்த ரிங் ரோடு முடிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. அதற்கான கொஞ்சம் பொறுமையா இருக்கணும் நம்ம. இப்பதான் கொஞ்சம் ஸ்ட்ரக்ச்சருக்கு வந்துருக்கு. அதனால நம்ம எல்லாரோட முயற்சியால அது நல்லபடியா நடக்கும். சின்ன உடைப்பு மக்கள் வந்து தொடர்ந்து போராட்டம்... அவங்க சொந்தக்காரங்களுக்குலாம், அதாவது அங்க உறவினர்களுக்கு பட்டா கேட்கிற பிரச்சனை நடந்துட்டு இருக்கு. இப்ப மாவட்ட நிர்வாகமும் கொடுக்குறாங்க, இப்ப நம்ம அதை எந்த அளவுக்கு சீக்கிரம் வந்து அவங்களை அங்கிருந்து வெளியேற்றுற முயற்சிகள் இருக்கு? சின்ன உடைப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே மக்கள்ட்ட பேசி அவங்களே ஒரு சில இடத்துல இடம் கேட்டுருக்காங்க. அதை ஆய்வு செஞ்சு அதுக்கு தேவையான. அந்த இடத்தை மாற்றாக கொடுப்பதற்கான ஆய்வு செய்யப்படுகிறது. ரொம்ப சீக்கிரம் சுமுகமா முடிந்து விடும் என கூறினார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 91 சிலைகளும் அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் தலா 7 சிலைகளும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து பக்தி இன்னிசை முழங்க பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிலைகள் வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் முருகன் கோவில் கடலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடக்கிற அருகிலே சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.1
- பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது1
- பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்1
- வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பள்ளியின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி நிலை, வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியின் சமையலறைக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவை சாப்பிட்டு அதனுடைய தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்பு பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து தேவையான நடவடிக்கையில் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.பின்பு அப்பகுதியில் பனை மர விதைகள் நடும் பணியை துவக்கி வைத்து வைத்தார்1