Shuru
Apke Nagar Ki App…
இன்று தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
கம்யூனிஸ்ட் காரன்
இன்று தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது1
- தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நமது மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், மதப் பெரியோர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா கூறும்போது.... மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது மிகப்பெரிய தவறு. அவரை மூன்று முறை முதலமைச்சர் ஆக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், போடி தொகுதி மக்களுக்கும் அவர் துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வரும் தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து நேரடியாகப் போட்டியிடுவேன். என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.1
- தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்1
- உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld1
- திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ரயில்வே மானிய கோரிக்கையின் 2026- 2027 மீதான விவாதத்தில் உரையாற்றினர்.1
- திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- Post by Natarajan Pitchaimani1
- ஆண்டிப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் - தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அதன்படி தேர்தலின் போது பணப்பட்டு வாடா மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேனி மாவட்டம் முழுவதும் 20 க்கும் ஏற்பட்ட நிலையான கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவினருக்கு தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து செய்து வருகின்றனர்.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திக் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை மறித்து வாகனத்தை சோதனை செய்த போது, பைக் கவரில் ரூ.1லட்சம் ரொக்க பணம் இருந்தது.இதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லபாண்டி என்பவரின் மகன் சந்துரு என்பதும், தான் வாடகை லாரி ஓட்டுவதாகவும் அதற்கான வாடகை பணத்தை வாங்கி வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கொண்டு வரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிபட்டி பகுதியில் 1லட்சம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1