அரண்மனைப் புதூரில் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரம்* *தேனியில் அரண்மனைப் புதூரில் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரம்* *போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்த கோரி பேச்சு* தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனைபுதூர், ஜவஹர் நகர், முத்துதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கூட்டத்தில் பேசிய ஜான்பாண்டியன் நமது அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் எதிரே நிற்கும் வேட்பாளருக்கு (ஓ.பன்னீர்செல்வம்) விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாது தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை சொத்துக்களைப் அபகரித்த குடும்பம் கடந்த தேர்தலில் அவருக்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தெருதெருவாக வந்தேன் ஆனால் இன்று அம்மாவிற்கு (ஜெயலலிதா) நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு தனது சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, இந்த தொகுதியிலும் மாற்றம் தேவை ஏழை எளிய மக்களை பார்ப்பதற்கு அருகதையற்றவர்க்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது நம்மோடு என்று மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்களிக்க வேண்டுமா என எண்ணிப் பாருங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை கற்பழிப்பு ஏதாவது நடந்ததா? ஆனால் திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு இரண்டு வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை பாதிக்கப்பட்டுள்ளன எதிர் வேட்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக் கூறி பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்து பேசி முடித்தார்
அரண்மனைப் புதூரில் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரம்* *தேனியில் அரண்மனைப் புதூரில் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரம்* *போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்த கோரி பேச்சு* தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனைபுதூர், ஜவஹர் நகர், முத்துதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கூட்டத்தில் பேசிய ஜான்பாண்டியன் நமது அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் எதிரே நிற்கும் வேட்பாளருக்கு (ஓ.பன்னீர்செல்வம்) விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாது தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை சொத்துக்களைப் அபகரித்த குடும்பம் கடந்த தேர்தலில் அவருக்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தெருதெருவாக வந்தேன் ஆனால் இன்று அம்மாவிற்கு (ஜெயலலிதா) நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு தனது சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, இந்த தொகுதியிலும் மாற்றம் தேவை ஏழை எளிய மக்களை பார்ப்பதற்கு அருகதையற்றவர்க்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது நம்மோடு என்று மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்களிக்க வேண்டுமா என எண்ணிப் பாருங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை கற்பழிப்பு ஏதாவது நடந்ததா? ஆனால் திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு இரண்டு வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை பாதிக்கப்பட்டுள்ளன எதிர் வேட்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக் கூறி பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்து பேசி முடித்தார்
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- பெற்றோர் Vs குழந்தைகள் !!! குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பில்லை !!! #family1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- Post by P.G.m Paintings1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- காங்கேயம் அருகே விவசாயிகள் கைது. திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாமல் மீண்டும் காங்கேயம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால் கருப்புக் கொடி காட்ட இருந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதால் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .1
- தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1